உங்க சங்காத்தமே வேணாம்.. சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கைகுலுக்க மறுத்த இந்தியா!
தி ஹேக்: சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் கை குலுக்கிய போது அதை ஏற்க மறுத்த இந்திய அதிகாரிகள் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்ன காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற 19 வயது இளைஞர் காரில் வெடிப்பொருட்களை ஏற்றிக் கொண்டு சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனத்தின் மீது மோதினார்.
இதில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா கடும் கோபத்தில் உள்ளது.

உளவு
இந்த நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது.

இந்தியா மனு
அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது.

கை குலுக்கல்
அந்த மனு மீதான விசாரணை இன்று தி ஹேக்கில் நடைபெற்றது. இந்த வழக்கின் வாதங்களை முன்வைத்த போது பாகிஸ்தானின் அட்டார்னி ஜெனரல் அன்வார் மன்சூர் கான் அங்கு அமர்ந்திருந்த இந்திய வெளியுறவு துறை செயலாளர் தீபக் மீட்டல் மற்றும் நெதர்லாந்துக்கான இந்திய தூதர் வேணு ராஜாமணி ஆகியோருக்கு கை குலுக்கினார்.

வைரல்
அப்போது அவருக்கு இருவரும் கைகுலுக்கவில்லை. மாறாக இரு கைகளை கூப்பி வணக்கம் என தெரிவித்தனர். இதன் மூலம் இரு தரப்பு உறவுகளும் நீடிப்பது கடினம் என்பதையே காட்டுகிறது. இந்த புகைப்படமும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
|
முன்பு ஒரு முறையும்
இது போல் பாகிஸ்தான் அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் அவமானப்படுத்துவது முதல் முறையல்ல. கடந்த 2017-ஆம் ஆண்டு இத் குல்பூஷன் யாதவ் வழக்கின் போது சர்வதேச நீதிமன்றத்தில் தெற்காசிய மற்றும் சார்க் அமைப்பின் பாகிஸ்தானுக்கான இயக்குநர் முகமது ஃபைசல் கை குலுக்கிய போதும் தீபக் மிட்டல் கை கொடுக்காமல் வணக்கம் என கைகளை கூப்பி கூறியது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications