Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கதற கதற.. மொத்தம் 40 பெண்கள்.. 10 வயசு குழந்தை முதல் கிழவி வரை.. ஒரு வருஷத்துல.. பயங்கர வாலிபன்!

40 பெண்களை சீரழித்த கொடூரனை நைஜீரிய போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

அப்யூஜா, நைஜீரியா: மொத்தம் 40 பெண்கள்.. 10 வயசு குழந்தை முதல் பாட்டி வரை நாசம் செய்திருக்கிறான் ஒரு காம கொடூரன்.. இந்த நபரை ஒரு வருட போராட்டத்துக்கு பிறகு நைஜீரிய போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் அக்கிரமங்களும், பலாத்காரங்களும் நைஜீரியாவில் தாண்டவமாடி வருகின்றன.. இதற்கு முக்கியமான காரணம் "போகோஹரம்" என்ற இயக்கத்தின் பயங்கரவாதிகள்தான்.

serial rapist arrested after 40 rapes in nigerian town

பெண் குழந்தைகளைகூட விட்டு வைக்க மாட்டார்கள்.. இவர்களின் ஆதிக்கம்தான் அங்கே தலைதூக்கி வருகிறது.. கதற கதற பலாத்காரம் செய்யப்படுவதுடன் அவர்களை கொலையும் செய்துவிடுவதுதான் இந்த சைக்கோக்களின் முக்கிய வேலை.

அந்த வகையில், கடந்த ஒரு வருடமாக கதி கலங்க வைத்தது கானோ மாகாணத்தில் உள்ள டங்கோரா என்ற நகரம்தான்.. ஒரே வருஷத்தில் 40 பெண்கள் மிக கொடூரமாக நாசம் செய்யப்பட்டனர்.

இதை செய்தது தனி ஒரு நபர் என்பதால், நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து விட்டனர்.. "வீ ஆர் டயர்ட்" (நாங்கள் களைப்படைந்து விட்டோம்) என்ற பெயரில் ஹேஷ்டேக்கை உருவாக்கினர்.. ஒவ்வொருவரும் நாக்கை பிடுங்குகிற மாதிரியான கருத்துக்களை அதில் பதிவிட்டனர். குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்..

மக்கள் உண்மையிலேயே பயந்துபோய் உள்ளனர்.. அடுத்து எந்த பெண் கொலை செய்யப்படுவாரோ என்ற பீதி கிளம்பி விட்டது.. ஒவ்வொரு நாளும் நிம்மதியை இழந்தபடியே இருந்தனர்.. இந்த சமயத்தில்தான் அந்த காம கொடூரன் பிடிபட்டுள்ளான்... வழக்கம்போல பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் இந்த நபர் பலாத்காரம் செய்ய நுழைந்துள்ளான்.. அத்துமீறி உள்ளே நுழைந்து பெட்ரூம் வரைக்கும்போய்விட்டானாம்.

அதற்குள் அந்த பெண் குழந்தைகளின் தாய் சுதாரித்து வந்து, அந்த கொடூரனை துணிச்சலாக மடக்கி பிடித்து, போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளார். பிறகு விரைந்து வந்த போலீசார் அந்நபரை கைது செய்து விசாரித்தனர்.. அந்த விசாரணையில் 10 வயது சிறுமியில் ஆரம்பித்து 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்திருக்கிறானாம்.. 32 வயதாகிறது.. பெண்களை பலாத்காரம் செய்தே பழகிவிட்டது என்று போலீசில் வாக்குமூலம் தந்துள்ளான்.

டங்கோரா மக்களுக்கு இப்போதுதான் சந்தோஷம் வந்துள்ளது.. ஒரு வருஷமாக ரொம்பவே பயந்துபோய்ட்டோம்.. தொடர் கற்பழிப்பில் ஈடுபட்ட இந்த நபருக்கு தகுந்த தண்டனையை தர வேண்டும் என்று சொல்கின்றனர்.. அத்துடன் இனிமேல்தான் நாங்கள் நிம்மதியா தூங்குவோம் என்கிறார்கள்.

புதருக்குள்.. எட்டிபார்த்தால்.. கிளுகிளுப்பு ஜோடி.. கொரோனா சிகிச்சைக்கு வந்த இடத்தில் லவ்வாம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+