பாகிஸ்தான் பிரதமராகிறார் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பீன் தம்பி ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டு புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். தற்போது பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக ஷபாஸ் ஷெரீப் இருந்து வருகிறார்
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியில் நீடிக்கத் தகுதி இல்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, 'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனம் தன்னிடம் இருந்த ரகசிய ஆவணங்களை பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிட்டது. அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், உலக தலைவர்கள், 500 இந்தியர்கள் பணம் பதுக்கி வைத்துள்ளது அம்பலமானது.
இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரும் இடம் பெற்றிருந்தது. இது குறித்து விசாரிக்க பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட் 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை நியமித்தது.
இந்தக் குழு விசாரணையின் முடிவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பஞ்சாப் மாகாண முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications