ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல்: ஷியா யாத்ரீகர்கள் 80 பேர் பலி

ஈராக்கில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் ஷியா பிரிவு யாத்ரீகர்கள் 80 பேர் கொல்லப்பட்டனர்.

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஈராக்கில் ஷியா யாத்திரிகர்களின் பேருந்துகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து தென்கிழக்கில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷோமாலி கிராமத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈராக்கின் கர்பாலா புனித தளத்திற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் சென்று வருவது வழக்கம்.

 Shia pilgrims among more than 80 killed in IS attack in Iraq

இந்த நிலையில் அர்பயீன் பண்டிகையொட்டி கர்பாலா புனித தளத்திற்கு சென்று ஷியா யாத்ரீகர்கள் பேருந்துகளில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பெட்ரோல் பங்கு ஒன்றின் அருகில் பேருந்துகள் நின்று கொண்டிருந்த போது அங்கு டிராக்டர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் பலர் ஈரான் நாட்டை சேர்ந்த ஷியா பிரிவு மக்கள் ஆவர். மேலும் 100க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+