இசை நிகழ்ச்சியின் போது பொங்கி வந்த கடல்.. பரிதாபமாக சிக்கிய மக்கள்.. இந்தோனேசிய சுனாமி வீடியோ
இந்தோனேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் சுனாமி தாக்கிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் சுனாமி தாக்கிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் இன்று அதிகாலையில் சுனாமி தாக்கியது. தற்போது அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் 168 பேர் பலியாகி உள்ளனர். இந்த சுனாமியில் 600 பேர் காயமடைந்துள்ளனர். 300க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள்.
இசை நிகழ்ச்சி
இந்த நிலையில் இந்த சுனாமி ஏற்பட்ட நேரத்தில் பண்டேலாங் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்து இருக்கிறது. பண்டேலாங் பகுதியில்தான் அதிக அளவில் சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பண்டேலாங் பகுதியில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே கடல் நீர் உள்ளே வந்துள்ளது.
|
அதிர்ச்சி
மேடையில் பாடகர் பாடிக்கொண்டு இருக்கும் போதே கடல் நீர் உள்ளே வந்துள்ளது. வேகமாக வந்த தண்ணீரில் அங்கிருந்த மக்கள் எல்லோரும் மூழ்கினார்கள். அங்கு 500க்கும் அதிகமான மக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
|
வைரல் வீடியோ
இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. இது பார்க்கவே பரிதாபக மனதை உறைய வைக்கும் வகையில் இருக்கிறது.
விவரம் வெளியாகவில்லை
ஆனால் இந்த இசை நிகழ்ச்சியை பார்க்கக் வந்தவர்களுக்கு என்ன ஆனது என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை. அங்கு இருந்த பார்வையாளர்கள் எல்லோரும் நீரில் சிக்கியதாக தகவல்கள் வருகிறது. ஆனால் இவர்களின் தற்போதைய நிலை குறித்து முழு விவரம் வெளியாகவில்லை.