பிரிட்டன் தேவாலயங்களில் மணியடிக்க ஆள் இல்லை!
லண்டன்: பிரிட்டனில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயங்களில் மணியடிக்கும் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தவிப்பதாக அங்குள்ள தேவாலயங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் உள்ள பழைமை வாய்ந்த தேவாலங்களில் உள்ள பிரம்மாண்ட மணியை அடிக்கும் வேலைக்கு ஆட்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர் என்றும் புதிதாக பணியில் சேர தற்போது யாரும் முன்வரவில்லை என்றும் தேவாலயங்களின் நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மணிகளை அடிப்பதற்கான தன்னார்வலர்கள் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை நியமிப்பதே வழக்கம் என்றும் இவ்வாறு இளைஞர்களைத் தேடிப்பிடித்து பணியில் அமர்த்துவது கடினமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பற்றாக்குறையை சாமாளிக்க ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட தேவாலயங்களில் மணியை ஒலிக்கச்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டு மக்கள் பாரம்பரியமாக கேட்டு வரும் தேவாலய மணிகளின் ஒலியை கேட்க முடியாமல் பலரும் கவலை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications