சிங்கப்பூரில் தைப்பூச விழா ஊர்வலத்தில் போலீசாரை தாக்கியதாக 3 தமிழர்கள் கைது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தைப்பூச விழா ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாரைத் தாக்கியதாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தைப்பூசத் திருவிழா சமீபத்தில் உலகெங்கும் முருகன் கோவில்களில் கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை இந்த விழா மிக விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தைப்பூசத்தை ஒட்டி ஊர்வலமும் நடந்தது.
அப்போது சிலருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இதில் தலையிட்டு மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாரைத் தாக்கியதாக ராமச்சந்திரன் சந்திரமோகன் (32), ஜெயகுமார் கிருஷ்ணசாமி (28), குணசேகரன் ராஜேந்திரன் (33) ஆகிய 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் சந்திரமோகனின் சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குணசேகரன் ராஜேந்திரன் மீது காவல் துறை அதிகாரியை மதரீதியில் புண்படுத்த முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications