ஆப்கனில் 6 தாலிபன் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக குற்றங்கள் இழைத்த தாலிபன் தீவிரவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே மிக நீண்டகாலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக அஷ்ரப் கனி கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்றார். அதன்பின் முதன்முறையாக இன்று தாலிபன் தீவிரவாதிகள் 6 பேர் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பின்படி, குடிமக்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எதிராக குற்றங்கள் இழைத்த தீவிரவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனை வழங்க கனி ஒப்புதல் வழங்கி விட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் காபூல் நகரின் மைய பகுதியிலான பாதுகாப்பு சேவை மையத்தின் மீது நடந்த தலீபான் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2001ம் ஆண்டிற்கு பின் நடந்த மிக கொடூர தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தாலிபன்களுக்கு எதிராக ராணுவம் கடுமையாக செயல்படும் என அஷ்ரப் கனி சபதம் எடுத்தார். மேலும், குற்றவாளிகளான தீவிரவாதிகளுக்கு மரண தண்டனைகள் உள்ளிட்ட சட்டபூர்வ தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications