செய்தியாளர் கொலையால் கொந்தளித்த மக்கள்.. பதவியை ராஜினாமா செய்தார் ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ
செய்தியாளர் கொலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் ஸ்லோவாகியா பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிராட்டிஸ்லாவா: செய்தியாளர் கொலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் ஸ்லோவாகியா பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஸ்லோவாகியா நாட்டின் செய்தியாளர் ஒருவர் அண்மையில் தனது காதலியுடன் படுகொலை செய்யப்பட்டார். பிரதமரின் ஊழல் குறித்து தோலுரித்ததாலேயே செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் கோபமடைந்த மக்கள் பிரதமருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு பகலாக நீடித்த போராட்டத்தால் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார் பிரதமர் ராபர்ட் ஃபிகோ.
இதையடுத்து அதிபரின் அறிவுறுத்தலின் படி தனது பதவியை பிரதமர் ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை அதிபர் ஆந்திரேஜ் கிஸ்கா ஏற்றுக்கொண்டார்.
மேலும் அரசு அமைக்குமாறு துணைப் பிரதமருக்கு அதிபர் ஆந்திரேஜ் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் ராஜினாமாவால் பிரச்சனைக்கு தற்காலிகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.