பாரீஸை மூச்சு திணற வைக்கும் மாசு: கார்களுக்கு தற்காலிக தடை

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பாரீஸ் நகரில் மாசால் புகை மண்டலமாக இருப்பதால் சாலைகளில் குறிப்பிட்ட அளவு வாகனங்களே அனுமதிக்கப்படுகிறது. மற்றவர்கள் பயணம் செய்ய ஏதுவாக பொது போக்குவரத்து இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் காற்று அதிக அளவில் மாசு அடைந்துள்ளது. மேலும் நாட்டின் வடக்கு பகுதியும் காற்று மாசால் அவதிப்படுகிறது. இதனால் அங்கு சாலைகளில் புகை மண்டலமாக உள்ளது. இந்நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்த பாரீஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Smog-choked Paris forces half of cars off roads

அதாவது, அரசு போக்குவரத்து வாகனங்கள் இலவசமாக இயக்கப்படும். அதனால் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை விட்டுவிட்டு அரசு போக்குவரத்து வாகனங்களில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் சாலைகளில் ஒற்றைப்படையில் முடியும் பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. டாக்சிகள், மின் கார்கள், ஆம்புலன்ஸுகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

அரசு போக்குவரத்து வாகனங்கள் இன்று வரை இலவசமாக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக உள்ள வாகன கட்டுப்பாடும் இன்று வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+