நல்ல செய்தி சொன்ன சீன மருத்துவ இயக்குனர்.. கொரோனா தடுப்பூசி எப்போது வரும்.. பரபரப்பு பேச்சு

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அவசரகால சூழ்நிலையில், சில சீன மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்தப்படும் என்று வூகானில் சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சி.டி.சி) இயக்குனர் காவ் ஃபூ தெரிவித்தார்.

Recommended Video

    கொரோனா மரபணு! கண்டறிந்த பெண் விஞ்ஞானியை மிரட்டிய சீனா

    கொரோனா வைரஸ் உலகில் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இடம் சீனாவின் ஹூபே மகாணத்தில் உள்ள வூகான் நகரம் ஆகும். 1.5 கோடி மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில் இருந்து தான் கடந்த ஜனவரி மாதம் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது.

    வெறும் 100 நாட்களுக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமானோரை உலகம் முழுவதும் பாதித்த கொரோனா அடுத்த 12 நாட்களுக்குள் 25லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் 1.70லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    மருத்துவர்கள் பணி

    மருத்துவர்கள் பணி

    இந்நிலையில் சீனாவின் ஹூபே மகாணத்தில் உள்ள வூகான் நகரத்தில் அமைந்துள்ள மருத்துவ மையத்தில் மீண்டும் பணியில் இணைந்த மருத்துவ பணியாளர்களை வரவேற்று நடத்தப்பட்ட விழாவில் சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சி.டி.சி) இயக்குனர் காவ் ஃபூ, கலந்து கொண்டார்.

    அவசர காலங்களில்

    அவசர காலங்களில்

    அப்போது அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக , அவசர காலங்களில், சில மருத்துவ ஊழியர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி மூலம் செலுத்தப்படுவார்கள். அனைவரின் கூட்டு முயற்சியால் நாங்கள் தடுப்பூசிகளைக் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.

    எப்போது தடுப்பூசி வரும்

    எப்போது தடுப்பூசி வரும்

    கொரோனா வைரஸ் தடுப்பூசி விஷயத்தில் சாதாரண நடைமுறையைப் பின்பற்றினால், இந்த ஆண்டு இறுதி வரை அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி வெளியே வராது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்துவிட்டால் , மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசிகள் செலுத்தப்படலாம். இது சாதாரண மக்களிடையே பயன்படுத்தப்படாது" என்றார்.

    சீனா மருத்துவ இயக்குனர்

    சீனா மருத்துவ இயக்குனர்

    தற்போது, ​​மறுசீரமைப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி ((adenoviral vector) ) சீனாவில் இரண்டாம் கட்ட சோதனைக்குள் நுழைந்துள்ளது. அதேநேரம் சில செயலில் இல்லாத தடுப்பூசிகளும் முதற்கட்ட சோதனைக்குள் நுழைந்துள்ளன என்று சீன சி.டி.சி இயக்குனர் தெரிவித்தார். வேறு சில தடுப்பூசிகளும் உள்ளதாகவும் அவை விரைவில் முதலாம் கட்ட பரிசோதனைக்கு நுழைய உள்ளதாகவும் கூறினார்.

    தொடங்கியது ஆராய்ச்சி

    தொடங்கியது ஆராய்ச்சி

    சீனாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸிற்கான செயல்பாட்டில் இல்லாத இரண்டு தடுப்பூசிகள், மருத்துவ சோதனைகளில் நுழைவதற்கு அதிகாரிகளிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. சீன இராணுவ தொற்றுநோயியல் நிபுணர் தலைமையிலான ஒரு ஆய்வுக் குழு உருவாக்கியதைத் தொடர்ந்து , இந்த தடுப்பூசி கடந்த வாரம் இரண்டாம் கட்ட சோதனைகளில் நுழைந்துள்ளது என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் ஜெனரல் யுவான்பின் ஏப்ரல் 14 அன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். சீனாவின் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன் உலகம் முழுவதும் முதலிடத்தில் உள்ளன. சீனா குறிப்பாக பாரம்பரிய உற்பத்தி தொழில்நுட்பத்தில் வழிநடத்தி தடுப்பூசிகளை உருவாக்குகிறது, ஏனெனில் இந்த பகுதிகளில் இது முன்னரே ஆராய்ச்சியைத் தொடங்கியது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+