சீக்கியர் கலவர வழக்கு- டிஸ்மிஸ் செய்யக் கோரி யு.எஸ். கோர்ட்டில் சோனியா மனு!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக மீது தொடரப்பட்ட வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
1984ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலைக்கு நீதி கோரி அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் அமைப்பு அந்நாட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சேர்க்கப்பட்டார். அவருக்கும் அமெரிக்கா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் அமெரிக்கா நீதிமன்றத்தில் சோனியாவின் சார்பில் வழக்கறிஞர், ரவி பத்ரா மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சோனியா மீதான வழக்கை டிஸ்மிஸ் செய்ய கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications