வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி பேருந்து.. 49 பேர் பலி! தென்னாப்பிரிக்காவில் சோகம்
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா இந்த ஆண்டு கடுமையான வானிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. திடீரென பெய்த கனமழையாலும், பனிப்பொழிவாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பள்ளி பேருந்து ஒன்று அடித்து செல்லப்பட்டிருக்கிறது. இதனால் குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் அதிக இயற்கை வளங்கள் கொண்ட நாடாகவும், அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடாகவும் தென்னாப்பிரிக்கா இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் தென்னாப்பிரிக்கா காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது.

கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் தென்னாப்பிரிக்காவை புரட்டிப்போட்டிருக்கிறது. இந்நாட்டில் பனிப்பொழிவு என்பது அபூர்வம். இது வெப்பமண்டல நாடு. எனவே உயரமான மலைப்பகுதிகளில் மட்டுமே பனிப்பொழிவு இருக்கும். அதுவும் மிகவும் லேசானதாக இருக்கும். ஆனால், இந்த முறை நகர் பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் போக்குவரத்து சேவையும், மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பேசிய கிழக்கு கேப் மாகாணத்தின் தலைவர், "உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்திருக்கிறது. மத்தா பகுதியில் பள்ளிப் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்பேருந்திலிருந்து 6 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். நான்கு பேர் இன்னும் காணவில்லை, அவர்களை தேடி வருகிறோம். என் வாழ்நாளில் நான் இப்படி ஒரு பேரழிவை பார்த்ததே இல்லை" என்று கூறியுள்ளார்.
லட்சக்கணக்கான வீடுகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை பேரிடரின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது? அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? பொதுமக்கள் என்ன ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்? என்பது குறித்த எந்த செய்தியையும் மக்களிடம் பகிர்ந்துக்கொள்ள முடியாத நிலையில், தென்னாப்பிரிக்கா அரசு பாதிக்கப்பட்டிருக்கிறது.
மத்தாதா பகுதியில் மட்டும், 58 பள்ளிகள் மற்றும் 20 மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குப்பைகள் குவியல் குவியலாக ஆங்காங்கே தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இவையெல்லாம் அரசுக்கு சவாலாக மாறியிருக்கிறது.
இதற்கு முன்னர் கடந்த 2022ம் ஆண்டு இதேபோன்று கனமழை பாதிப்பு ஏற்பட்டது. கனமழையால் சுமார் 400 பேர் வரை உயிரிழந்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கை பேரிடர், காலநிலை மாற்றத்தின் அலாரமாக பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் என்பதே ஒரு போலியான விஷயம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் பேசி வரும் நிலையில், சமகாலத்தில் அதன் பாதிப்புகளை நாம் உணர தொடங்கியுள்ளோம் என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications