தென்னாப்பிரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களை அனுமதிக்கும் முதல் மசூதிக்கு மூடுவிழா?
கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்களை அனுமதிக்கும் மசூதி மூடப்பட உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் மசூதி ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. அந்த மசூதியில் ஓரினச்சேர்க்கையாளர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
இது முனிசிபால் விதிக்கு புறம்பானது என்று கூறி அந்த மசூதியை மூடவுள்ளனர்.

நிறுவனர்
எனது எதிர்ப்பாளர்கள் தான் மசூதியை மூட வைக்க வழி செய்கிறார்கள். நகர கவுன்சில் அதிகாரிகள் முஸ்லிம் தலைவர்களின் வற்புறுத்தலால் மசூதியை மூட உள்ளனர் என்று மசூதியின் நிறுவனரான முஸ்லிம் கல்வியாளர் தாஜ் ஹார்கி தெரிவித்துள்ளார்.

மசூதி
ஹார்கி சேமிப்பு கிடங்காக இருந்த இடத்தை மசூதியாக மாற்றுவது குறித்து உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை என்று நகர கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் அக்டோபர் மாதம் 23ம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிப்பதாக ஹார்கி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு
மசூதி இருக்கும் இடத்திற்கு நகர கவுன்சில் ஒப்புதல் வழங்குவது கடினம். ஏனென்றால் அந்த இடத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லை. அருகில் ஒரு ஒர்க்ஷாப் உள்ளது. அங்கிருந்து வரும் புகையில் மசூதிக்கு வருபவர்களுக்கு பிரச்சனை என்று நகர கவுன்சில் கருதுகிறது. மேலும் மசூதியில் வாகன நிறுத்துமிடமும் இல்லை என்கிறது கவுன்சில்.

வசதி இருக்கிறது
மசூதியை திறந்த கையோடு 2 மணிநேரத்தில் மூடிவிட்டதாக கவுன்சில் கூறுவதில் உண்மை இல்லை. மசூதி வளாகத்தில் போதிய வாகன நிறுத்துமிடம் உள்ளது என்றார் ஹார்கி.












Click it and Unblock the Notifications