என் வீட்டுக்குள் புகுந்து என் மனைவியை பலாத்காரம் செய்தனர்: தென்னாப்பிரிக்க அதிபர் ஜுமா பேட்டி

Subscribe to Oneindia Tamil

ஜொஹன்னஸ்பர்க்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் தனது வீட்டுக்குள் புகுந்து தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தனது பண்ணை வீட்டை 23 மில்லியன் டாலர் செலவில் புதுப்பித்தது தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

South African President Says Wife Was Raped

இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்கிறார்கள். 1998ம் ஆண்டு சிலர் க்வாஜுலு-நாடாலில் உள்ள என் வீட்டுக்குள் புகுந்து என் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்றார்.

ஆனால் அவர் தனது 4 மனைவிகளில் யார் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதை தெரிவிக்கவில்லை. அவரின் ஒரு மனைவி தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் விவாகரத்து பெற்றுவிட்டார்.

ஜுமா கடந்த 2009ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அதிபராக பொறுப்பேற்றார். நாளை அதிபர் தேர்தல் நடக்கிவிருக்கின்ற நிலையில் அவர் எதற்காக தனது மனைவி பலாத்காரம் செய்யப்பட்டதை இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தெரிவித்துள்ளார் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+