தென் கொரிய படகு விபத்து- பலியான 250 மாணவர் குடும்பங்களுக்கு ரூ.2.36 கோடி இழப்பீடு
சியோல்: தென் கொரிய படகு விபத்தில் பலியான சுமார் 250 மாணவ, மாணவியரின் குடும்பங்களுக்கு தலா 420 மில்லியன் வான்களை நிவாரணமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபாய் 2.36 கோடி ஆகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி, தென் கொரியாவின் ஆன்சன் பகுதியில் உள்ள டான்வோன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 323 மாணவர்கள் ஜேஜு தீவுக்கு செவோல் என்ற படகில் விடுமுறை சுற்றுலா சென்றனர்.

அப்போது அந்த படகில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக 476 பேர் பயணித்ததால் நீரில் மூழ்கி அந்தப் படகு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுமார் 250 மாணவ-மாணவியர் உள்பட பலர் பலியாகினர். இந்த விபத்து நடைபெற்று ஓராண்டு நெருங்கும் நிலயில் நீரில் மூழ்கி பலியான மற்றும் காணாமல் போனதாக கருதப்படும் நபர்களுக்கு தென் கொரிய அரசு நிவாரணத் தொகையை இன்று அறிவித்துள்ளது.
பலியான மாணவ-மாணவியர்களின் குடும்பங்களுக்கு தலா 420 மில்லியன் வான் (மூன்று லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) அதாவது, இந்திய மதிப்புக்கு சுமார் 2 கோடியே 36 லட்ச ரூபாய், மற்றும் பலியான ஆசிரியர்களுக்கு அவர்களின் வருமானத்தை கணக்கில் கொண்டு 760 மில்லியன் வான் (ஒரு மில்லியன் வான் என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய்) நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலியான இதர பயணிகள் அனைவருக்கும் அவரவர் வயது மற்றும் உயிருடன் இருந்த காலத்தில் சம்பாதித்த வருவாய்க்கு தக்கபடி 150 மில்லியன் வான் முதல் 600 மில்லியன் வான் வரை இழப்பீடாக வழங்கப்படும் எனவும் தென் கொரிய கடல்சார் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications