முன்னாள் மாணவரை தாக்கி, தனது மல, ஜலத்தை உட்கொள்ள வைத்த கொடுமைக்கார பேராசிரியர் கைது

Subscribe to Oneindia Tamil

சியோல்: தென் கொரியாவில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனது முன்னாள் மாணவர் ஒருவரை சுமார் இரண்டு ஆண்டுகளாக அடித்து கொடுமைப்படுத்தி தனது மல, ஜலத்தை உட்கொள்ள வைத்துள்ளார்.

தென் கொரியாவில் உள்ள சியோல் நகர் அருகே 52 வயது பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனது 2 முன்னாள் மாணவர்களுடன் சேர்ந்து 29 வயது முன்னாள் மாணவரை கடந்த 2013ம் ஆண்டில் இருந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அந்த வாலிபர் பேராசிரியரின் என்.ஜி.ஓ.வில் பணியாற்றியுள்ளார். அவரை ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்க வைத்து அந்த சம்பளத்தை பேராசிரியர் பறித்து வந்துள்ளார்.

சியோல்

பேராசிரியர் தனது முன்னாள் மாணவரை பேட்டால் அடித்தும், பிளாஸ்டிக் பையில் மிளகாய் பொடியைத் தூவி அதை அவரின் தலையில் கட்டியும் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் பேராசிரியர் தனது முன்னாள் மாணவரை மனித மல, ஜலத்தை உட்கொள்ள வைத்துள்ளார்.

தன்னை ஒரு நாள் அவர் பேராசிரியர் ஆக்குவார் என்ற நம்பிக்கையில் அந்த வாலிபர் அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டார். இந்நிலையில் அவர் பணியாற்றும் ஹோட்டலில் உள்ளவர்கள் நிலைமையை உணர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பல்கலைக்கழக பேராசிரியர், அவரின் முன்னாள் மாணவர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+