ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தென் கொரியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.. நாளை நடக்கிறது
சியோல்: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, தென் கொரியாவிலுள்ள தமிழ் நண்பர்கள் சார்பாக அறவழி போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காளையை காட்சி விலங்கு பட்டியலில் முந்தைய மத்திய அரசு இணைத்ததன் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போதைய மத்திய அரசு இதுவரை அந்த விதிமுறையில் திருத்தம் கொண்டு வராத நிலையில் இந்த ஆண்டும், ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனே நீக்க வலியுறுத்தி கொரியா தமிழ் நண்பர்கள் என்ற அமைப்பு சார்பாக அறவழி போராட்டம் நடைபெற உள்ளதாம்.
தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டிற்கு உடனே அனுமதி வழங்க முயற்சி செய்யுமாறு மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தியும், கொரியா தமிழ் நண்பர்கள் சார்பாக, ஞாயிற்றுக்கிழமை (08.01.2017) பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சியோல் தேசிய பல்கலைகழக வளாகத்தில் அறவழி போராட்டம் நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் உணர்வை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடைபெறும் இடம்: Line no 2 (Green Line), Station Name : Nakseongdae Station, Exit no:4
Take no 2 Bus and get down at SNU amphitheater, Bus stop name: SNU Amphitheater, Approximate travelling time 12-15 min from Nakseongdae Station என குறிப்பிடப்பட்டுள்ளது.
லோகநாதன் நாதன்- 010-3017-4428, ஆரோக்கியராஜ் செல்வராஜ், 010-4006-7121, ஹரிபாலன் பெருமாள் சாமி 010-2902-4695 ஆகியோரை இந்த எண்களில் அழைத்து போராட்டம் குறித்து அறியலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications