கிம்- ட்ரம்ப் சந்திப்பு.. சென்டோசா தீவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நேபாள கூர்க்காக்கள்!
கிம் - ட்ரம்ப் சந்திப்பு நடைபெறவுள்ள சென்டோசா தீவில் 1800 கூர்க்காக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

சிங்கப்பூர்: கிம் - ட்ரம்ப் சந்திப்பு நடைபெறவுள்ள சென்டோசா தீவில் 1800 கூர்க்காக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நாளை சந்திக்கவுள்ளனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு சிங்கப்பூரில் நாளை நடைபெறுகிறது.
கீரியும் பாம்புமாக இருந்த இருநாட்டு தலைவர்களும் நாளை சந்திக்க இருப்பது உலக நாடுகளிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது. நாளைய சந்திப்பு எப்படி இருக்கும் என உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

பலத்த பாதுகாப்பு
நாளைய சந்திப்பை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிட் ஜாங் உன் சிங்கப்பூரில் முகாமிட்டுள்ளனர். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை சந்திப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வட கொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரின் அழகு கொஞ்சும் சென்டோசா தீவில் சந்திக்கவுள்ளனர். சென்டோசா தீவில் உள்ள கேபல் விடுதியில் நாளை சந்திக்கின்றனர்.

தீவு முழுவதும்
ட்ரம்ப் - கிம் சந்திப்பிற்காக நேபாளத்தை சேர்ந்த 1800 கூர்காக்கள் ஸ்பெஷலாக பாதுகாப்பு ஈடுபட்டுள்ளனர். இந்த கூர்க்காக்கள் டிரம்ப்-கிம் சந்திப்பு நடக்கவுள்ள சென்டோசா தீவு முழுதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூர்க்காக்கள் மகிழ்ச்சி
இவர்களிடம் துப்பாக்கியுடன் கூர்மையான கத்தியும் உள்ளது. இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு பாதுகாப்பாக இருப்பது பெருமையாக உள்ளதாக கூர்க்காக்கள் மகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அரசே ஏற்றுக்கொள்ளும்
இதனிடையே, ட்ரம்ப் - கிம் சந்திப்புக்காக சுமார் நூறு கோடி ரூபாய் செலவாகும் என்றும், இந்தச் செலவைச் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications