இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.460.. அடுத்து இந்தியாதான்! எல்லாம் டிரம்பால் வந்த வினை!
கொழும்பு: ஈரான் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகளை இந்த விலை ஏற்றம் பாதித்திருக்கிறது. இப்படி இருக்கையில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.460 என்கிற அளவுக்கு விலை உயர்ந்திருக்கிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலைகள் இன்று முதல் 25% உயர்த்தப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் பொருளாதார பிரச்சனைகளிலிருந்து இலங்கை வெளியே வந்தது. இப்படி இருக்கையில் பெட்ரோல் விலை உயர்வு, மீண்டும் இந்த பிரச்சனைக்குள் இலங்கையை தள்ளும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புதிய விலை நிலவரம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய இரு நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் (92 Octane): ஒரு லிட்டர் சுமார் ரூ. 370-லிருந்து ரூ. 460-ஆக உயர்வு.
டீசல் (Auto Diesel): ஒரு லிட்டர் சுமார் ரூ. 315-லிருந்து ரூ. 395-ஆக உயர்வு.
மண்ணெண்ணெய்: மீன்பிடி மற்றும் சமையல் தேவைகளுக்கான மண்ணெண்ணெய் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏன் இந்த திடீர் உயர்வு?
ஈரான்-இஸ்ரேல் மோதலால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $120-ஐத் தாண்டியுள்ளது. இதற்கு முன்னர் இதன் விலை $90-ல் இருந்தது. அதேபோல, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் காப்பீடு மற்றும் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது. இன்னொரு முக்கியமான காரணம், டாலர் தட்டுப்பாடு. இலங்கை தனது இறக்குமதிக்குத் தேவையான டாலர்களைச் செலுத்த சிரமப்படுவதால் விலை அதிகரித்திருக்கிறது.
பாதிப்புகள் என்ன?
எரிபொருள்தான் எல்லாவற்றிற்கும் அத்தியாவசியம். எனவே அதன் விலை உயர்ந்தால், மற்ற பொருட்களின் விலையும் கணிசமாக உயரும். பேருந்து மற்றும் முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் 20% முதல் 30% வரை உயர வாய்ப்புள்ளது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உடனடியாக உயரும். டீசல் மூலம் இயங்கும் வெப்ப மின் நிலையங்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், மின் கட்டணமும் உயர்த்தப்படலாம்.
இந்தியாவுக்கும் பாதிப்பு
இலங்கையை போலவே இந்தியாவிலும் கூடிய சீக்கிரத்தில் எரிபொருள் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 5 மாநில தேர்தல் வருவதால், இந்த நேரத்தில் எரிபொருள் விலையை உயர்த்துவது மத்திய அரசுக்கு பேக் ஃபயராக அமைந்துவிடும்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications