இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.460.. அடுத்து இந்தியாதான்! எல்லாம் டிரம்பால் வந்த வினை!
கொழும்பு: ஈரான் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகளை இந்த விலை ஏற்றம் பாதித்திருக்கிறது. இப்படி இருக்கையில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.460 என்கிற அளவுக்கு விலை உயர்ந்திருக்கிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலைகள் இன்று முதல் 25% உயர்த்தப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் பொருளாதார பிரச்சனைகளிலிருந்து இலங்கை வெளியே வந்தது. இப்படி இருக்கையில் பெட்ரோல் விலை உயர்வு, மீண்டும் இந்த பிரச்சனைக்குள் இலங்கையை தள்ளும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புதிய விலை நிலவரம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய இரு நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் (92 Octane): ஒரு லிட்டர் சுமார் ரூ. 370-லிருந்து ரூ. 460-ஆக உயர்வு.
டீசல் (Auto Diesel): ஒரு லிட்டர் சுமார் ரூ. 315-லிருந்து ரூ. 395-ஆக உயர்வு.
மண்ணெண்ணெய்: மீன்பிடி மற்றும் சமையல் தேவைகளுக்கான மண்ணெண்ணெய் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏன் இந்த திடீர் உயர்வு?
ஈரான்-இஸ்ரேல் மோதலால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $120-ஐத் தாண்டியுள்ளது. இதற்கு முன்னர் இதன் விலை $90-ல் இருந்தது. அதேபோல, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் காப்பீடு மற்றும் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது. இன்னொரு முக்கியமான காரணம், டாலர் தட்டுப்பாடு. இலங்கை தனது இறக்குமதிக்குத் தேவையான டாலர்களைச் செலுத்த சிரமப்படுவதால் விலை அதிகரித்திருக்கிறது.
பாதிப்புகள் என்ன?
எரிபொருள்தான் எல்லாவற்றிற்கும் அத்தியாவசியம். எனவே அதன் விலை உயர்ந்தால், மற்ற பொருட்களின் விலையும் கணிசமாக உயரும். பேருந்து மற்றும் முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் 20% முதல் 30% வரை உயர வாய்ப்புள்ளது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உடனடியாக உயரும். டீசல் மூலம் இயங்கும் வெப்ப மின் நிலையங்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், மின் கட்டணமும் உயர்த்தப்படலாம்.
இந்தியாவுக்கும் பாதிப்பு
இலங்கையை போலவே இந்தியாவிலும் கூடிய சீக்கிரத்தில் எரிபொருள் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 5 மாநில தேர்தல் வருவதால், இந்த நேரத்தில் எரிபொருள் விலையை உயர்த்துவது மத்திய அரசுக்கு பேக் ஃபயராக அமைந்துவிடும்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications