Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜபக்சேக்கள் கோட்டைகள் சுக்கு நூறாக தகர்ப்பு-விரட்டியடித்த சிங்களர்- நாமல் ராஜபக்சே கேவலமான தோல்வி!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி சிங்களப் பேரினவாதியான ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றுள்ளார். அதேநேரத்தில் ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்தை அழித்து ஒழித்து பல லட்சம் ஈழத் தமிழரை 2009-ம் ஆண்டு இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே- கோத்தபாய ராஜ்பக்சேவின் கோட்டைகள் அத்தனையும் சுக்கு நூறாக தகர்க்கப்பட்டுவிட்டன. மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜ்பக்சேவுக்கு சிங்களரே மிக கேவலமான தோல்வியைப் பரிசாக தந்து ஓட ஓட விரட்டியடித்துள்ளனர்.

இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட ஜனாதிபதிகள் எராளம். ஜேஆர் ஜெயவர்த்தனே, பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்கே வரிசையில் மிக மூர்க்கமாக ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழித்தது மகிந்த ராஜபக்சேதான். இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சே, இலங்கை பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய ராஜபக்சே என சகோதரர்கள் இருவரும் ஈழத் தமிழழர்களை அழித்து கொன்று குவித்தனர். ஈழத் தமிழர்களின் கால் நூற்றாண்டு விடுதலைப் போராட்டத்தையே நிர்மூலமாக்கினர். பல லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

sri lanka presidential election 2024 sri lanka election

ஒரு கட்டத்தில் மகிந்த ராஜபக்சே பிரதமராக, கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதியான அலங்கோலமும் நிகழ்ந்தது. ஆனால் பொருளாதார சீரழிவால் சிங்களின் பெருங்கோபத்துக்குள்ளாகினர் இருவருமே. அடுத்தடுத்து இருவரும் பதவி விலகி உயிருக்கு அஞ்சி வெளிநாடுகளில் தஞ்சமடைந்த சரித்திரமும் அரங்கேறியது.

தற்போதைய இலங்கை ஜனாதிபதி தேர்தலில் குட்டியைவிட்டு ஆழம் பார்த்த கதையாக ராஜபக்சேக்கள் தங்களது இளவரசர் நாமல் ராஜபக்சேவை களமிறக்கிப் பார்த்தனர். ஆனால் ராஜபக்சேக்கள் எனும் கொடுங்கோலர்களுக்கு அரசியல் வரலாற்றில் இடமே இல்லை என்பதை சிங்களர் தரப்பு மட்டுமின்றி தமிழர் தரப்பும் திட்டவட்டமாகவே வாக்குகள் மூலம் பிரகனடம் செய்துவிட்டன.

அதுவும் அம்பந்தோட்டா என்பது ராஜபக்சேக்களின் கோட்டை என கொக்கரித்த காலமும் இருந்தது. ஆனால் அந்த அம்பந்தோட்டாவிலேயே நாமல் ராஜபக்சேவுக்கு கேவலமான வாக்குகளே கிடைத்தன. வெறும் 6.25% வாக்குகளைத்தான் நாமல் ராஜ்பக்சேவால், அம்பந்தோட்டாவில் பெற முடிந்தது. ஆமாம் அம்பந்தோட்டா உள்ளிட்ட ராஜபக்சேக்கள் கனவில் கட்டி வைத்திருந்த கோட்டைகள் அத்தனையும் சுக்கு நூறாக இந்த தேர்தலில் தகர்த்து எறியப்பட்டு ராஜபக்சேக்கள் எனும் கொடுங்கோலர்களின் அரசாட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது என்பதே சரியானதாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+