ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விசாரணை அறிக்கையை இலங்கை எதிர்க்கக் கூடாது: யு.எஸ். அட்வைஸ்
நியூயார்க்: போர் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை இலங்கை எதிர்க்கக் கூடாது என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் இனப்படுகொலை செய்தது என்பது குற்றச்சாட்டு. லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது சர்வதேசத்தின் கோரிக்கை.
இது தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. அதில் போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையை அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.
ஆனால் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கையே போர்க்குற்ற விசாரணையை நடத்தலாம் என்ற அறிக்கையை அமெரிக்கா தாக்கல் செய்ய உள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் பிரதிநிதி நிஷா பிஸ்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது உலகம் முழுவதும் தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனிடையே நிஷா பிஸ்வாலுடன் இலங்கை சென்ற மற்றொரு பிரதிநிதி டாம் மாலினோவ்ஸ்கி தமது ட்விட்டர் பக்கத்தில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிக்கையை இலங்கை எதிர்க்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை வெளியாகிய பின்னர் இலங்கை அரசு தன்னை நியாயப்படுத்தக் கூடாது;
When UN report comes hope #SriLanka gov will continue defending country w/o being defensive, accepting need to fully, honestly confront past
— Tom Malinowski (@Malinowski) August 27, 2015 அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது; இலங்கை அரசானது கடந்த கால தவறுகளை தைரியமாக எதிர்நோக்க வேண்டும்; ஒருபோதும் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக் கூடாது.
முழுமையான அளவிலும் நேர்மையாகவும் கடந்த கால பிரச்சினைகளை எதிர்கொள்ள இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறு அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications