காதலனை குத்திக் கொன்றுவிட்டு தப்பிவிட்டேன்: ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட இளம்பெண்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த 18 வயது பெண் தனது காதலரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடியதை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னார்டினோ கவுன்ட்டியைச் சேர்ந்தவர் நகாசியா ஜேம்ஸ்(18). அவர் டோரியன் பவல்(21) என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்துள்ளது.

Stabbed Him, Am On The Run: Arrested After Posting Murder On Facebook

பவல் நகாசியாவின் முகத்தில் குத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நகாசியா அருகில் இருந்த கத்தியை எடுத்து பவலை குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கடந்த 11ம் தேதி காலை பவல் பிணமாகக் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதற்கிடையே நகாசியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

கத்தியை எடுத்து அவரை குத்திவிட்டேன். அவரை காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் அவர் இறந்துவிட்டார். நான் தப்பியோடிக் கொண்டிருக்கிறேன். அவரை நான் வேண்டும் என்றே குத்தவில்லை என்பது கடவுளுக்கு தெரியும். அவர் என்னை கையால் முகத்தில் குத்தினார். அதனால் தான் கத்தியை எடுத்தேன்.

கடவுளே என்னை மன்னித்துவிடு, சாரி டோரியன் பவல், உனது ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்திருந்தார். பின்னர் அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

இந்நிலையில் நகாசியா ஹெமட் நகரில் உள்ள நார்த் ஹாமில்டன் அவென்யூவில் இருக்கும் அபார்ட்மென்ட்டில் இருப்பதாக போலீசாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று நகாசியாவை கொலை வழக்கில் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+