அரசு பள்ளிகளிலும் இனி மாணவிகள் விளையாடலாம்... தடையை நீக்கியது சவுதி அரேபியா
Subscribe to Oneindia Tamil
ரியாத்: சவுதி அரேபியா பள்ளிகளில் மாணவிகள் விளையாட அமலில் இருந்த தடை நீக்கப் பட்டுள்ளது.
முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு பெண்கள் ஓட, பள்ளிகளில் மாணவிகள் விளையாட போன்ற பல தடைகள் உள்ளன.
பள்ளி மாணவிகள் விளையாடுவதற்கு தடை விதிக்கப் பட்டிருப்பதற்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து சில தனியார் பள்ளிகள் மாணவிகளை விளையாட அனுமதித்தது.
தனியார் பள்ளிகளைத் தொடர்ந்து அங்குள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம் என உத்தரவிடப்பட்டது.
தடை நீக்கப் பட்டதையடுத்து கடந்த வாரம் ஜெட்டாவில் நடந்த கைப்பந்து போட்டியில் மாணவிகள் பங்கேற்று விளையாடினர். எனவே அரசு பள்ளிகளில் கூடைப்பந்து, டென்னிஸ், ஆக்கி போன்ற விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications