மனுஷனா நீ... உரிமையாளர்களுக்கு உதவாதவர்களைப் பார்த்து "முறைக்கும்" நாய்கள்!

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: தன்னுடைய உரிமையாளர்களுக்கு உதவி செய்யாதவர்களை நாய்கள் வெறுப்பதாக ஜப்பான் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களுடனே பழகி, குடும்பத்தில் ஒருவராக வாழும் அளவிற்கு செல்லப்பிராணியாக நாய்கள் உள்ளன. சில நாடுகளில் நாய்களுக்கென பள்ளிகள், விளையாட்டுக் கூடங்கள், சொகுசு அறைகள் மற்றும் பியூட்டி பார்லர்கள் கூட இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ஜப்பானில் நாய்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப் பட்டுள்ளது.

ஆய்வு...

ஆய்வு...

டோக்கியோவின் கியோட்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் 18 நாய்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அந்த ஆய்வில் நாய்களின் உரிமையாளர்கள் ஒரு பெட்டியை திறக்க வேண்டும். உரிமையாளருக்கு உதவி செய்வதற்கு இரண்டு அந்நியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

உதவிக்கு 2 பேர்...

உதவிக்கு 2 பேர்...

ஆனால் அதில் ஒருவர் மட்டுமே உதவி செய்கிறார். மற்றவர் உரிமையாளருடனோ நாயுடனோ பேசவோ அல்லது உதவியோ செய்யாமல் இருக்கிறார். உரிமையாளர் பெட்டியை திறக்கும் இந்த காட்சிகளை அவர்களின் நாய்கள் பார்க்க வைக்கப்பட்டன.

சாப்பிட மறுப்பு...

சாப்பிட மறுப்பு...

பின்னர், உதவி செய்த அந்த இரண்டு நபர்கள் மூலம் அந்த நாய்க்கு தின்பதற்கு பண்டங்கள் தரப்பட்டது. அப்போது உதவி செய்யாத நபர் தந்த உணவுகளை நாய்கள் சாப்பிட மறுத்து விட்டது.

மனிதர்களைப் போலவே...

மனிதர்களைப் போலவே...

இதன் மூலம், தனது உரிமையாளருக்கு உதவி செய்யாதவர்களை நாய்கள் வெறுப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே, மனிதர்களைப் போலவே நாய்களும் உணர்ச்சி அடிப்படையில் முடிவுகளை எடுப்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+