Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈராக்கின் மிகப்பெரிய அணையைக் கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்.... பிரதமரின் பிடி தளர்கிறது!

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: குர்திஷ் படைகளைத் தோற்கடித்து ஈராக்கின் மிகப்பெரிய அணையான மொசூல் அணையை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரைப்பிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், தொடர்ந்து மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களையும் கைப்பற்றி வருகின்றனர்.

sunni insurgents 'seize Iraq's biggest dam' in defeat for Kurdish forces

ஈராக் தலைநகர் பாக்தாத்தைப் பிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறிய அவர்கள், அந்த நகருக்கு 100 கி.மீ. தொலைவிலேயே படையை நிறுத்திக்கொண்டு விட்டனர்.

இலக்கு...

அதனைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள எண்ணெய் வயல்களுக்கு அருகேயுள்ள நகரங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்கானது. சிரியா எல்லையில் உள்ள நகரங்கள் மீதும் அவர்கள் கண் வைத்தனர்.

ஜூமார் நகர்...

குர்தீஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஈராக் நகரான ஜூமார் நகரை பிடிப்பதற்கு திட்டமிட்டனர் தீவிரவாதிகள். குர்தீஷ் படையினரோடு நடந்த கடும் சண்டைக்குப் பிறகு கடந்த சனியன்று அந்நகரை அவர்கள் கைப்பற்றினர்.

முன்னேற்றிச் செல்கின்றனர்...

இதனால், அதன் சுற்றுப்புற கிராமங்களும் தீவிரவாதிகள் வசம் வந்து விட்டன. மேலும் ஜூமார் நகரையொட்டி அமைந்திருந்த எண்ணெய் வயலையும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டனர். மேலும், இரண்டு நகர் பகுதிகளை அவர்கள் கைப்பற்றினர்.

மொசூல் அணை...

இந்நிலையில் ஈராக்கின் மிகப்பெரிய அணையான மொசூல் அணையையும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மொசூல் அணையை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிக்கம்...

ஈராக்கில் படிப்படியாக தீவிரவாதிகளின் கை ஓங்கி வருவதால், அந்நாட்டு பிரதமர் நூரி அல் மாலிக்கின் பிடி தளர்ந்து வருகிறது.

அச்சம்..

இந்த அணையை தீவிரவாதிகள் வீழ்த்தி விட்டதால், அது நாட்டின் மின் வினியோக அமைப்பில் சேதாரத்தை ஏற்படுத்தி விடும். பெரிய வெள்ளத்துக்கும் வழிநடத்தி விடும் என அஞ்சப்படுகிறது.

விலகிக் கொண்டனர்.

இதற்கிடையே அணைப்பகுதியில் சண்டையில் ஈடுபடாமல் குர்திஷ் படையினர் விலகி கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+