ஸ்வீடனின் 2வது பெரிய ஏர்போர்ட்டில் குண்டு வெடித்ததாக பீதி... 2 மர்மப் பைகள் சிக்கின
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் நாட்டின் 2வது பெரிய விமான நிலையத்தில் இன்று குண்டுவெடிப்பு நடந்ததாக பெரும் பீதி ஏற்பட்டது. ஆனால் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 2 மர்மப் பைகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஸ்வீடனின் லான்ட்வெட்டர் நகரில் உள்ள விமான நிலையம் அந்த நாட்டிலேயே 2வது பெரிய விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்தில் இன்று மர்மமான "பொருள்" வெடித்ததாக தகவல் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
URGENT: #Sweden's @landvetter airport evacuated due to explosion threat https://t.co/8pgSPHYAvp pic.twitter.com/vZ3S1R37AH
— Sputnik (@SputnikInt) March 31, 2016
விமான நிலையம் முழுவதும் காலி செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்படடனர். பாதுகாப்புப் படையினர் வெடி விபத்து நடந்ததாக கூறப்பட்டு உள்நாட்டு முனையப் பகுதியை மூடி சீல் வைத்தனர்.
அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு 2 மர்மமான பைகள் இருப்பதைப் போலீஸார் பார்த்து அதை மீட்டனர். அது சோதனையிடப்பட்டு வருகிறது.
முன்னதாக இந்த விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை காலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் ஆட்லெர்சன் கூறியுள்ளார்.
இந்த விமான நிலையத்தை நிர்வகித்து வரும் ஸ்வடெவியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உல்ப் வாலின் கூறுகையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. விமான நிலையம் தற்போது போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் கடந்த 22ம் தேதி அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 35 பேர் பலியானார்கள். அதற்கு முன்பு பாரீஸ் தீவிரவாதத் தாக்குதலுக்குள்ளானது. இந்த நிலையில் ஸ்வீடனில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications