புத்தாண்டில் பறிபோன உயிர்கள்.. சுவிட்சர்லாந்து தீ விபத்தில் அதிகரித்த பலி எண்ணிக்கை! 5 நாள் துக்கம்
பெர்ன்: சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, அந்த நாட்டை முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 47 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தையடுத்து, நாட்டில் 5 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மான்டனா என்ற புகழ்பெற்ற சுற்றுலா பகுதியிலுள்ள 'லீ கான்ஸ்டலேஷன்' என்ற இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அங்கு கூடி இருந்தனர்.

அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் முதலில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீ மிக வேகமாக பரவியதால் பலரும் வெளியேற முடியாமல் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் பலர் பெரும் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் பின்னர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மற்றவர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க அவசர சேவைகள், தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர்கள் பெரிய அளவில் ஈடுபட்டன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அண்டை நாடுகளான இத்தாலி மற்றும் ஜெர்மனி மருத்துவமனைகளுக்கும் மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடக்க தகவல்படி, விடுதியின் மேற்கூரை பகுதியை தீ வேகமாகப் பற்றியதே பேரழிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின், இந்த விபத்தை நாட்டில் நடந்த மிகக் கவலைக்கிடமான சம்பவமாக அறிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் 5 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் அரசாங்க கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் தேசியக் கொடி இறக்கிப் பறக்கவிடப்படும் எனவும், அதே நேரத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சுற்றுலா பகுதிகளில் தீ பாதுகாப்பு விதிமுறைகள் சரிபார்க்கப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications