சிட்னி ஹோட்டல் முற்றுகை: உள்ளே இருப்பது ஒரே ஒரு தீவிரவாதிதான் – போலீசார் தகவல்
சிட்னி: சிட்னி ஹோட்டல் தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டுள்ள விவகாரத்தில் ஹோட்டலின் உள்ளே துப்பாக்கி ஏந்திய ஒரே ஒரு தீவிரவாதி மட்டுமே உள்ளே இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சிறைபிடிக்கப்பட்ட ஹோட்டல் ஜன்னல் வழியாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடி என சந்தேகிக்கப்படும் கொடி ஒன்றும் பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம் உடனடியாக மூடப்பட்டது. மேலும் ஓபரா ஹவுஸ், சிட்னி பாலம் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன.

தீவிரவாதிகள் புகுந்துள்ள ஹோட்டலின் பெயர் லின்ட் சாக்கலேட் ஃகேப். தீவிரவாதிகள் உள்ளே புகுந்தபோது 20க்கும் மேற்பட்டோர் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிணையமாக பிடித்து வைக்கப்பட்டவர்களில் மூன்று பேர் தப்பி வந்துள்ள நிலையில், உள்ளே ஒரே ஒரு தீவிரவாதிதான் இருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவனிடம் பேச போலீஸ் தரப்பில் முயற்சிக்கப்பட்டு வருகிறது.அதேசமயம், தீவிரவாதியுடன் பேரம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

தீவிரவாதியை உயிருடன் பிடித்தால்தான் அவனது உள்நோக்கம், அவனுக்குப் பின்னால் இருப்பது யார், ஆஸ்திரேலியாவில் தீவிரவாதிகள் என்ன மாதிரியான திட்டத்துடன் உள்ளனர் என்ற விவரம் தெரிய வரும் என்பதால் போலீஸார் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications