சிரியா: ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 53 பேர் பலி
கிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற இத்தாக்குதலில் இறந்தவர்களில் 21 பேர் குழந்தைகள் என சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மாகாணங்களில் ஒன்றான டேர் அல்-ஜோரில் தாக்குதல் நடைபெற்ற இந்த கிராமம் உள்ளது.
பொதுமக்கள் குடியிருப்புகளில் நடைபெற்ற தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதாக அந்த கண்காணிப்பு குழு முதலில் தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது இறப்பு விகிதம் அதிகரித்திருக்கக்கூடும் என நம்பப்படுவதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் கண்காணிப்புக்குழுத் தலைவர் கூறியுள்ளார்.
"சிதைந்த கட்டிடங்களின் எஞ்சிய பாகங்களை அகற்றிய பின்னர், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என ராமி அப்துல் ரஹ்மான் கூறினார்.
ஆறு நீண்ட தூர குண்டு வீசும் விமானங்கள் மூலம் இப்பகுதியில் தாக்குதல் நிகழ்த்தியதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் இருப்புகள் மீதுதான் தாக்கியதாக கூறியுள்ளது.
சிரிய உள்நாட்டுப் போரில் அந்நாட்டு அதிபர் பஷர் அல்-அசாத்தின் முக்கிய கூட்டாளியாக ரஷ்யா இருந்து வருகிறது.
ஐ.நா ஆதரவுடன் அமைதி பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஜெனிவாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு முன்னாள் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தது.
மேலும், ஞாயிற்றுக்கிழமையன்று, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதிகளில், சிரிய அரசு துருப்புகள் நடத்திய தாக்குதலில் சுமார் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன..
கிழக்கு கூத்தாவில் உள்ள பல நகரங்கள் வான்வழித் தாக்குதல்களாலும், பீரங்கியாலும் தாக்கப்பட்டன என ஆய்வு மையம் கூறியது.
ஆனால் இதில் எந்த செய்தியும் இன்னும் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து, 120 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்புக்குழு தெரிவிக்கிறது.
பல ஆண்டுகள் முற்றுகைக்குப் பின், கிழக்கு கூத்தாவில் 4 லட்ச குடியிருப்புவாசிகளின் நிலைமை மோசமாக உள்ளதென்றும், பலர் பட்டினியால் இறந்திருப்பதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
அங்கு ஏற்பட்ட உணவு பற்றாக்குறை காரணமாக மக்கள், விலங்குகளுக்கான தீவனம் மற்றும் குப்பையை கூட உண்ணுவதாக, கடந்த வாரம் ஐ.நா அறிக்கை அளித்தது.
பிற செய்திகள்:
- பாலி எரிமலை சீற்றம்: உயர்மட்ட எச்சரிக்கை விடுப்பு, விமான நிலையம் மூடல்
- பாகிஸ்தான்: கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை கலைக்க ராணுவ நடவடிக்கை இல்லை
- சௌதி அரேபியா-இஸ்ரேல் : ரகசிய கூட்டணியின் மர்மம் என்ன?
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!














Click it and Unblock the Notifications