சிரியாவில் இருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஜெர்மனி வந்த குடும்பம்

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: சிரியாவில் இருந்து அகதிகளாக கிளம்பிய ஒரு குடும்பம் பத்திரமாக ஜெர்மனிக்கு வந்துள்ளதில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகிறார்கள். நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் பெரும்பாலும் கடல் வழியாக செல்கின்றனர். கடலில் செல்கையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலர் பலியாகி வருகின்றனர்.

Syrian family reaches Germany safely

இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த லைத் மஜித் அல் அமிரிஜ் தனது மனைவி நதா, மகன்கள் முஸ்தபா, அகமது மற்றும் மகள்கள் தாஹா, நூர் ஆகியோருடன் நாட்டை விட்டு வெளியேறி துருக்கியை அடைந்தார். அங்கிருந்து அவர்கள் கிரேக்க தீவான காஸுக்கு கடந்த மாதம் 16ம் தேதி வந்தனர். கடல் வழியாக உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்த அவர்கள் கோஸ் தீவை அடைந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

அமிரிஜ் தனது இளைய மகளை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார். பின்னர் அவர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது குறித்து ஆங்கில ஆசிரியையான நதா அமிரிஜ் கூறுகையில்,

ஜெர்மனியில் எங்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்வதுடன் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகள் உள்ளதால் இந்த நாட்டை தேர்வு செய்தோம். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் மிகவும் அன்பானவர். அவர் எங்களுக்கு தாய் போன்றவர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+