தைவான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் திருவிழா 2024.. ஆட்டம் பாட்டம்.. அறுசுவை உணவுடன் கோலாகலம்
தைபே: தைவான் நாட்டில் 12ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்தினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் கடந்த 14 முதல் 17 வரை போகி தொடங்கி காணும் பொங்கல் வரை 4 நாட்கள் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

தைவான் தமிழ்ச்சங்கத்தின் 12 ஆம் ஆண்டு பொங்கல் விழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள தைவான் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உள்ளரங்கத்தில் சனிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் சுமார் 250 பேர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் ஆ.கு. பிரசன்னன் அவர்கள் வரவேற்று உரையாற்றினார். தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு அறிக்கையை துணைத் தலைவர் ரமேசு பரமசிவம் அவர்கள் வாசித்தார்கள்.
தைப்பொங்கல் விழாவினை தைவான் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் யூசி அவர்கள், இந்திய தைபே அசோசியேசனின் முதன்மை இயக்குனர் திருமிகு. மன்ஹர்சிங் லக்ஷ்மண்பாய் யாதவ் அவர்கள், டாடா கன்செல்டன்சியின் தைவான் நாட்டிற்கான தலைவர் கார்த்தி சேதுமாதவன் அவர்கள், தைவான் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டீன் பேராசிரியர் யிங்-ஜங் இவோன் யே அவர்கள், தேசிய தைவான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொது செயலாளர்கள் பேராசிரியர். ஜெங் ஷ்யோ லூ அவர்கள் மற்றும் ராபர்ட் சூ அவர்கள், கோ ஆக்ஷன் கார்பரேசன் தலைவர் முனைவர். டேவிட் சூ அவர்கள், மற்றும் பூ ஜென் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆல்பர்ட் தாங் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
தைவான் தமிழ்ச்சங்கம் வருடம் தோறும் நடத்தும் சிறுவர்களுக்கான ஓவிய கண்காட்சி காணொளியாக திரையிடப்பட்டது. ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட 11 சிறுவர், சிறுமியர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருள் வழங்கப்படுத்தப்பட்டது.
கலை நிகழ்ச்சி: தைவான் தமிழ்ச்சங்கத்தின் கலைநிகழ்ச்சிகள் எப்பொழுதும் நம்முடைய பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக இருக்கும். அந்த வகையில் இத்தைப்பொங்கல் விழாவில் குச்சிப்புடி, பரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனம், கலைஞர்களின் ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறுவர் சிறுமியரின் ஆடை அணிவகுப்பு பார்ப்பவர் அனைவரையும் பரவசப்படுத்தியது.
சகோதரிகள் நிவ்ரிதி கல்யாணி சாரனு, அஷிதா சாரனு இருவரும் குச்சிப்புடி நடனமாடினார்கள். இருவரும் பள்ளி மாணவிகள், குச்சிப்புடி நடனத்தினை பல ஆண்டுகளாக கற்றுத் தேர்ந்தவர்கள். பொங்கல் விழாவில் கணபதி வந்தனம் நடனமாடி அசத்தினர். செல்வி. நிவ்ரிதி கல்யாணி சாரனு அவர்கள் ஆதிபராசக்தி மஹிஷாசூரமர்தினி நடனத்தை குச்சிப்புடி பாரம்பரிய நடன வடிவில் ஆடினார்கள்.
"என்னோடு நீ இருந்தால்" என்று தொடங்கும் பாடலை தாய் மற்றும் மகனின் உணர்வுப்பூர்வமான பிணைப்பின் பின்னணியில் திருமதி. சங்கரி பிரியா பிரகாஷ் மற்றும் பிரஸ்யூத் பிரகாஷ் அவர்கள் இருவரும் சேர்ந்து பாடினார்கள். பொங்கல் விழாவில் குழந்தைகளுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பில் கலந்துகொண்ட குழந்தைகள் அனைவருக்கும் பேராசிரியர் ஆல்பர்ட் தாங் அவர்கள் பரிசுபொருள் வழங்கினார்கள். ஜோயல் சக்ரியா ஜோசப் அவர்கள் கிட்டார் வாத்தியம் இசைத்து பாடல்களை பாடினார்.
இணைப்பு பாலம்: இந்த நிகழ்ச்சியில் தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். இந்த வகையில் தைவான் தமிழ்ச்சங்கமானது இந்திய மற்றும் தைவான் மக்களிடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது என்று சொல்வது மிகையாகாது.
நிகழ்ச்சிகள் அனைத்தும் திரு. கிரன் கேசவன், திருமதி. ரெனி அஜாய், திருமதி. வினோதினி மற்றும் செல்வி. அபிநயா ஆகியோரால் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனைவருக்கும் புரியும் வகையில் தொகுத்து வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் சுமார் 250 பேருக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.
தைவான் தமிழ்ச்சங்க துணைப் பொது செயலாளர் திரு. சு.பொன் முகுந்தன் அவர்கள் மற்றும் பொருளாளர் திரு. தங்கராசு அரிச்சந்திரன் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்தார். நிறைவாக தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. ராஜமோகன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications