செல்பி மூலம் நம் உருவத்தின் "3டி சிலை"... ஜெர்மன் நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்
நியூயார்க்: செல்பி எடுத்துவிட்டு அதன் மூலமாக 3டி சிலையாக நம்முடைய உருவத்தினை செய்து கொள்ளும் ஜெர்மன் நிறுவனத்தின் முறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த புதிய முறை மூலம் தயாரிக்கப்படும் 4 அங்குல உருவச் சிலைக்கு ரூபாய் 6 ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது.
3 டி பிரின்டர் மூலம் நாம் விரும்பும் பொருள்களை சிலை வடிவில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். இந்த தொழில் நுட்பத்துடன் ஒவ்வொருவரின் படத்தையும் 3 டி மூலம் செல்பியாக எடுத்து அதைக்கொண்டு அவரின் சிலையை செய்து கொடுக்க ஜெர்மன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

இதற்காக அந்த நிறுவனம், ஜப்பானில் டோக்கியோ, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ், மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் தங்கள் ஸ்டூடியோக்களை அமைக்கிறது.
செல்பி மூலம் தங்கள் உருவச் சிலையை செய்துகொள்ள விரும்புகிறவர்கள், இந்த நிலையத்துக்குச் சென்று, ஸ்டைலாக நின்றுகொண்டு தங்களை 3 டி கேமரா மூலம் படம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த நிறுவனத்தினர், அந்த படத்தை 3 டி பிரின்டர் மூலம் உருவச் சிலையாக செய்து தருவார்கள்.
4 அங்குல உருவச்சிலை செய்ய ரூபாய் 6 ஆயிரமும், முழு உருவச் சிலை செய்ய ரூபாய் 45 லட்சத்து 75 ஆயிரம் வசூலிக்க இருப்பதாகவும் அந்த நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications