பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்.. பெண் வேடம் அணிந்து துப்பாக்கியால் சுட்ட தாலிபான்
பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர் நகரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்: பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர் நகரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கு இருக்கும் வேளாண் பல்கலைக்கழகம் ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள புகழ்பெற்ற வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று காலை திடீர் என்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. பர்தா அணிந்து பெண் வேடத்தில் வந்த தீவிரவாதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

இந்த மோசமான தாக்குதல் காரணமாக அங்கு இருந்த மக்கள் நிலை தடுமாறினார்கள். இதில் 4 பேர் மிகவும் மோசமாக காயம் அடைந்தனர். தற்போது இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ராணுவத்திற்கு தக்க பாடம் புகட்டவே இந்த தாக்குதலை நடத்தியதாக தாலிபான் அமைப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications