துபாயில் கவியரங்குடன் நடந்த தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வாக வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேர் சார்பில் நண்பர்களின் சந்திப்பு 17.04.2015 அன்று காலை 11 மணிக்கு துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

Tamil New Year celebrated in Dubai

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இரட்டைக் கவியரங்கம் நடத்தப்பட்டது. முதல் கவிதை என்னும் தலைப்பில் திருமதி. உமா பாலாஜி தலைமையிலும், மறக்க முடியவில்லை என்னும் தலைப்பில் தமிழன் மு. யமுனாலிங்கம் தலைமையிலும் கவிஞர்கள் மீனாகுமாரி பத்மநாதன், ரமா மலர்வண்ணன், அஞ்சுகா, ஸ்வேதா கோபால், கிருத்திகா. கிருஷ்ணவேணி, சசிகுமார், அதிரை மெய்சா, காவிரிமைந்தன், ஜியாவுதீன், ஜெயராமன், ஆனந்தி, சபரிநாத், நாகப்பன், வெற்றிவேல் செழியன், ஹிதயத்துல்லா, முத்துப்பேட்டை ஷர்புதீன், நாகினி. கோவிந்தராஜன் ஆகியோர் தங்கள் கவிதைகளை வழங்கினார்கள்.

Tamil New Year celebrated in Dubai

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை கவிதாயினி ரமா மலர்வண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியை கவிஞர் காவிரிமைந்தன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாரதி காவலர் முனைவர் கே.ராமமூர்த்தி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ரமா மலர்வண்ணன்.

Tamil New Year celebrated in Dubai

சிவ ஸ்டார் கோவிந்தராஜன், காவிரிமைந்தன், ஜியாவுதீன், லக்ஷ்மி நாராயணன், முதுவை ஹிதாயதுல்லா, குளச்சல் இப்ராகிம், திருமதி.மீனாகுமாரி பத்மநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+