துபாயில் தமிழர்கள் நடத்திய பேட்மிண்டன் போட்டி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழர்கள் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் தியா ஆடி ரங்கா மற்றும் ரிக் அரிமாவோ ஆகியோர் அடங்கிய குழுவினர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

துபாயில் நல்லெண்ண பேட்மிண்டன் குழுவினர் பேட்மிண்டன் போட்டியினை நடத்தினர். இதில் தியா ஆடி ரங்கா மற்றும் ரிக் அரிமாவோ அடங்கிய குழுவினர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

ஜாபர் இப்ராஹிம் மற்றும் ரோஹித் ஹரிதாஸ் குழுவினர் இரண்டாம் இடம் பெற்றனர். சத்யநாராயணன், சஜயன் பாலன், டென்னி மற்றும் தாமஸ் மாத்யூ ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை டெக்டான் என்ஜினியரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் மேலாண்மை இயக்குநர் லக்ஷ்மணன் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யது அலி, நஜீர், டாக்டர் இளங்கோ உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.












Click it and Unblock the Notifications