ஆசிரியர்களின் டார்ச்சரால் பள்ளி மாணவனுக்கு பக்க வாதம்.. பாகிஸ்தானில் கொடூரம்
பாகிஸ்தானில் ஆசிரியரின் டார்ச்சரால் பள்ளி மாணவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் ஆசிரியர் கொடுத்த டார்ச்சரால் 14 வயதுடைய பள்ளி மாணவன் மயக்க நிலைக்கு தள்ளப்பட்ட அவலம் நடந்துள்ளது.
இத்தகவலை பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ளது. முகமது அகமத் என்ற அந்த மாணவனை பள்ளி ஆசிரியர் கழுத்தை நெரித்ததால் பேச்சுத் திறன் இழந்து பக்கவாத நோயினால் தாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது,

இதனால், அந்த மாணவனின் மூட்டுக்களில் எந்த விதமான அசைவும் தென்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது அகமத்தின் தந்தை குலாம் அகமதுவும் ஒரு ஆசிரியர் எனக் தெரியவந்துள்ளது. தனது மகனின் இந்த நிலைக்கு சில ஆசிரியர்களே காரணம் என்றும், இந்த சம்வம் 4 மாதங்களுக்கு முன்பாகவே நடந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், எனது மகனின் பள்ளி நிர்வாகத்தினர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வலிப்பு நோயினால் முகமது அகமத் பாதிக்கப்பட்டதாக கூறினர். உடனடியாக பள்ளிக்கு சென்று பார்த்தபோது எனது மகனின் முகம், மார்புப் பகுதி, தலை, மூட்டுக்களின் முன்பின் பகுதிகள் காயங்களுடன் கட்டுப் போடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மாணவன் கடுமையாக தாக்கப்பட்டதாலேயே இந்த நிலைக்கு ஆளானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்கா கொண்டு சென்றாலே அந்த மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் அளவிற்கு தம்மிடம் வசதி இல்லை என்று செய்வதறியாது குலாம் அகமது தவித்து வருகிறார். மேலும், ஆறு மகள்களுக்கு தந்தையான குலாம் அனைத்து சேமிப்பினையும் முகமதுவின் மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்துவிட்டதாக கூறி மன வேதனையில் இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications