கடத்தி கட்டாயப்படுத்தி 1000 ஆண்களுடன் செக்ஸ்: மோட்டல் மீது கேஸ் போட்ட சிறுமி
பிலடெல்பியா: பிலடெல்பியாவில் கட்டாயப்படுத்தி 1000க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொள்ள வைத்தது தொடர்பாக மோட்டல் ஒன்றின் மீது 17 வயது சிறுமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிலடெல்பியா நகரில் உள்ள ரூஸ்வெல்ட் இன் என்ற மோட்டலில் பல ஆண்கள் சிறுமிகள், பெண்களை அழைத்து வந்து, கடத்தி வந்து செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மோட்டல் அறைகளில் நடக்கும் விஷயம் அறிந்தும் அதன் நிர்வாகம் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் கடத்தி வரப்பட்டு ரூஸ்வெல்ட் மோட்டலில் வைத்து 14 வயது சிறுமி ஒருவர் ஓராண்டு காலமாக 1000க்கும் மேற்பட்ட ஆண்களால் வஞ்சிக்கப்பட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் சிறுமியுடன் இரண்டு அல்லது மூன்று ஆண்கள் கூட கட்டாய செக்ஸ் வைத்துள்ளனர். அவர்கள் சிறுமியை மோட்டலுக்கு அழைத்து வந்து மாதம் அல்லது வாரக் கணக்கில் அடைத்து வைத்து செக்ஸ் வைத்துள்ளனர்.
தற்போது 17 வயதாகும் அந்த சிறுமி ரூ. 33 லட்சம் கேட்டு ஹோட்டல் நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். மோட்டல் நிர்வாகமோ அங்கு சந்தேகத்திற்கு இடமாக எதுவுமே நடக்கவில்லை என்கிறது.












Click it and Unblock the Notifications