நேபாளத்தில் மீண்டும் பதற்றம்.. டிக்டாக் வீடியோவால் வெடித்த வன்முறை! இந்தியாவுடனான எல்லை சீல்
காத்மாண்டு: நேபாளத்தில் ஜென் சி தலைமுறையினர் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்ததில் ஆட்சி மாற்றமே ஏற்பட்ட நிலையில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மசூதி சேதப்படுத்தப்பட்டதாக வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அங்கு நடந்த போராட்டம் மீண்டும் வன்முறையாக மாறியுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நிலமை கையை மீறி செல்வதால் தற்போது இந்தியாவுடனான எல்லையை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியர்களும் நாடு திரும்ப தொடங்கியுள்ளனர்.

நேபாளத்தில் மீண்டும் பதற்றம்
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த ஆண்டு ஆளும் அரசுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது. ஜென் சி தலைமுறையினர் நடத்திய இந்த போராட்டத்தில் வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஆட்சியில் இருந்த கேபி சர்மா ஒலி பதவி விலகினார்.
இதையடுத்து, நேபாளத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேபாளத்தின் பர்சா மாவட்டத்தில் மத பதற்றத்தை தூண்டும் வகையில் வீடியோ ஒன்று வைரல் ஆனது.
வீடியோவை கண்டித்து போராட்டம்
இந்த வீடியோவை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிர்கஞ்ச் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் ரக்சல் மாவட்டத்தில் உள்ளது. இது இந்தியாவின் பீகாரை ஒட்டிய பகுதியாகும்.
நிலமை கையை மீறி செல்வதால் தற்போது இந்தியாவுடனான எல்லையை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு
முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஹைதர் அன்சாரி மற்றும் அமநத் அன்சாரி என்ற இருவர், சமூக வலைத்தளங்களில் பிற மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. நேபாளத்தில் உள்ள தனுஷா மாவட்டத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த வீடியோ டிக் டாக் உள்ளிட்ட வலைத்தளங்களில் வைரலான நிலையில், மத பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர் மக்கள் இருவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேற்கூறிய இரு நபர்கள் வெளியிட்ட வீடியோவால், மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர்.
பதற்றம் அதிகரித்தது
இதற்கிடையே, சக்வா மாரன் பகுதியில் உள்ள மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டது. இதனால், அங்கு பதற்றம் அதிகரித்தது. மக்கள் வீதிகளில் வந்து போராட தொடங்கினர். அப்போது அங்குள்ள இந்து அமைப்புகள், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள் என்று கூறினர். இது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
நாடு திரும்பும் இந்தியர்கள்
சிறிது நேரத்தில் போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். உள்ளூர் போலீஸ் நிலையத்தையும் சூறையாடினர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து பிர்கஞ்ச் பகுதியில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலமை மோசமாகி வரும் நிலையில், அங்கு பணியாற்றி வரும் இந்தியர்கள் நாடு திரும்ப தொடங்கியுள்ளனர். பிர்கஞ்ச் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று இந்திய தொழிலாளி ராகேஷ் என்பவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications