லிபியாவில் பயங்கரம்.. இடம் பெயர்ந்தோர் முகாம் மீது திடீர் விமான தாக்குதல்.. 40 பேர் பலி
தஜோரா: லிபியாவில் புலம்பெயர்வோர் மையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
லிபிய தலைநகர் திரிபோலி அருகே உள்ள தஜோரா என்ற இடத்தில் தான் விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய திரிப்போலிக்கு கிழக்கே 15 கி.மீ தொலைவில் மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது தஜோரா.

ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளில் இருந்து முறையான ஆவணமின்றி குடியேற, கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் முக்கிய இடமாக லிபியா உள்ளது.
இந்நிலையில் தான் தஜோரா பகுதியில் அமைந்துள்ள புலம்பெயர்வோர் மையம் மீது வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், வான்வழித் தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறியுள்ளனர். படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்துள்ளதாக கூறியுள்ளன.ர் இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சுவதாகவும் லிபிய நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கொடூர வான்வழித் தாக்குதலை கலீஃபா ஹிஃப்டர் தலைமையிலான லிபிய தேசிய ராணுவம் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications