ஆ ..ஊ.. அயய்யோ வூ....ஒரே நேரத்தில் ஆற்றில் குதித்த 2 காதலிகள்.. ஒருவரை மட்டும் மீட்ட சீன வாலிபர்!
பெய்ஜிங்: சினிமாவில் பார்த்திருப்போம், ஏன் டிவி சீரியலில் கூட பார்த்திருப்போம்.... ஆனால் நிஜத்தில் பார்த்திருக்கிறீர்களா.. பார்த்திருக்கிறீர்களா என்று நரம்பு புடைக்க கத்திக் கேட்கும் வகையில் உள்ளது இந்த செய்தி. காரணம், மேட்டர் அப்படி.
சீனாவில் யாரை உண்மையாக காதலிக்கிறாய் என்று கேட்டு ஒரு காதலனை பயங்கரமாக சோதித்து விட்டனர் இரு பெண்கள். இந்த சிக்கல் யாருக்குமே வரக் கூடாது. அப்படிப்பட்ட அபாயகரமான சிக்கல் இது.

சீனாவைச் சேர்ந்தவர் வூ ஸியா 21 வயதாகும். இவரது காதலியின் பெயர் ஜுன் தாங். இவருக்கு 20 வயதாகிறது. இவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த வூ, திடீரென 22 வயதான ரோங் டாசோ என்ற பெண்ணைப் பார்த்து அவர் மீது மையல் கொண்டு ஆள் மாறினார்.
இதனால் ஜூன் தாங்கை அவர் புறக்கணித்து வந்தார். 3 மாதமாக இந்த லடாய் நீடித்து வந்தது. இதையடுத்து 3 பேரும் நேரில் உட்கார்ந்து பேசி பிரச்சினையை சரி செய்ய முடிவெடுத்தார் வூ. அதன்படி 3 பேரும் தனிமையில் சந்தித்தனர். ஆனால் அவர்கள் சந்தித்த இடத்தில் நடந்ததுதான் பெரும் விபரீதமாக போய் விட்டது.
அநத் இடம் கிழக்கு சீனாவில் உள்ள நிங்போ என்ற அழகான இயற்கைச் சூழலுடன் கூடிய பகுதியாகும். அந்த இடத்தில் இரு காதலிகளுக்கும் இடையே பெரும் சண்டை மூண்டது
இந்த சண்டையால் கோபமடைந்த புதிய காதலி தடாரென அருகில் இருந்த ஆற்றில் குதித்து விட்டார். குதிப்பதற்கு முன்பு உனக்கு என் மீது உண்மையிலேயே அன்பு இருந்தால் என்னைக் காப்பாற்று என்று வேறு கூறி விட்டு குதித்து விட்டார்.
விடுவாரா பழைய காதலி.. அவரும், ஆற்றில் குதித்தார். அவரும் அதேபோல டயலாக் விடவே, பெரும் தர்மசங்கடமாகி விட்டது வூ-வுக்கு. ஆற்றில் குதித்த இரு பெண்களும் உயிருக்காக போராடத் தொடங்கினர். காப்பாற்ற வருமாறு வூவை அழைத்துக் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து ஆற்றில் குதித்த வூ, தனது பழைய காதலியை மட்டும் காப்பாற்றி மீட்டு கொண்டு வந்து மருத்துவமனைக்கு விரைந்தார். போகிற வழியில் தனது அண்ணனுக்குப் போன் செய்து, புதிய காதலியை காப்பாற்றுமாறு கூறினார். அண்ணனும் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டு கொண்டு வந்தார்.
இப்போது இந்தக் கதைதான் சீனாவில் வைரல் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications