தாய்லாந்து நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது!

Subscribe to Oneindia Tamil

பாங்காங்: தாய்லாந்து நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் ஆளும் அரசுக்கு எதிராக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் உச்சமாக அதிகார துஷ்பிரயோக வழக்கில் செய்த பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவியைப் பறித்து அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தகத் துறை அமைச்சர் நிவாட்டம்ராங் பூன்சாங் பய்சான் நியமிக்கப்பட்டார்.

Thai military seizes power in coup

ஆனால் பொதுத்தேர்தலை உடனே நடத்தக் கோரி போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்துக்கு பதிலடியாக ஆளும் கட்சியும் போராட்டத்தில் குவித்தது.

இதைத் தொடர்ந்து முதலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. பின்னர் ராணுவ சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்கு மேற்கத்திய நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாக இன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் ராணுவப் புரட்சியும் ஆட்சியும் நிகழ்வது இது முதல் முறையல்ல. 1932 ஆம் ஆண்டு முதல் கடைசியாக 2006 ஆம் ஆண்டு வரை பல ராணுவ அரசுகள் தாய்லாந்தில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+