நிச்சயித்த மாப்பிள்ளை இறந்தும் அவரையே திருமணம் செய்த தாய்லாந்து பெண்
பாங்காக்: தாய்லாந்தில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திடீர் என மாரடைப்பால் மரணம் அடைந்துவிட இறுதிச் சடங்கின்போது அவரையே திருமணம் செய்து கொண்ட பெண்ணை பலரும் பாராட்டியுள்ளனர்.
தாய்லாந்தில் உள்ள சசோயிங்சாவ் மாகாணத்தைச் சேர்ந்தவர் நான் திப்பராத். அவருக்கும் ஃபியட் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஃபியட் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஃபியட்டின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த நான் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஃபியட்டை முறைப்படை திருமணம் செய்து கொண்டார். இந்த காட்சியை நேரில் பார்த்த அனைவராலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
நான் திருமணம் முடிந்த கையோடு அதை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். நாம் திருமணம் செய்ய கனவு கண்டோம். நாம் இருவரும் கைகோர்க்க நினைத்தோம். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். ஐ லவ் யூ ஃபியட். நம் கனவு நிறைவேற்றிவிட்டது என்பதை தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் தெரிவித்துள்ளார்.
நான் செய்த காரியத்தை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் கூட இந்த பெண்ணை பாராட்டலாமே!












Click it and Unblock the Notifications