தாய்லாந்து மன்னரின் நாயை கிண்டல் செய்தவர் மீது தேச துரோக வழக்கு... 37 ஆண்டு சிறை!
பாங்காங்: தாய்லாந்தில் மன்னரின் நாயைக் குறித்து இணையத்தில் கருத்து தெரிவித்த தொழிலாளி மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் ஒற்றையாட்சி நாடாளுமன்ற முறை அரசியல் சட்ட முடியாட்சி நடைபெற்று வருகின்றது. மன்னராக தற்போது பூமிபால் அதுல்யாதெஜ் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார்.

அங்கு மன்னரை விமர்சிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் அமலில் உள்ளது. கடந்த ஆண்டு 400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மன்னரைக் குறித்து கருத்து தெரிவித்ததற்காக சிந்தையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மன்னரின் நாயைக் கிண்டல் செய்ததற்காக தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்தத் தொழிலாளியின் பெயர் தானாகொர்ன் சிரிபைபூன். சமீபத்தில் இவர் மன்னரின் நாய் குறித்து இணையத்தில் கேலி செய்யும் விதத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சிரிபைபூன் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் மன்னரை அவமதித்த குற்றச்சாட்டு என இரண்டு பிரிவுகளின் கீழ் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களுக்காக அவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிரிபைபூனின் வழக்கறிஞர் கூறுகையில், "மன்னருடைய நாய் குறித்து உண்மையில் சிரிபைபூன் என்ன சொன்னார் என்பது குறித்து ராணுவம் எந்த தகவலையும் வெளியிட மறுக்கிறது. மேலும், மன்னரின் நாய்க்காக சட்டம் பயன்படுத்தப்படும் என்று நான் கற்பனை கூட செய்யவில்லை. இது மிகவும் முட்டாள்தனமானது" எனத் தெரிவித்துள்ளார்.
மன்னரின் நாயை விமர்சித்ததற்காக தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் தாய்லாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications