இந்தியாவில் தத்தெடுக்கப்பட்ட பெண் குழந்தை மரணத்தில் திடுக் திருப்பம்.. அமெரிக்க தந்தை அதிரடி கைது
அமெரிக்காவில் காணாமல் போனதாக நம்பப்பட்ட குழந்தையை அவளது தந்தையே கொன்றுவிட்டு நாடகம் ஆடியது அம்பலம் ஆகியுள்ளது.
Recommended Video
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகானத்தில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தையின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் தந்தையே அவளை கொன்றுவிட்டு போலீசில் காணாமல் போனதாக புகார் அளித்தது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. இந்தக் குழந்தையை போலீசார் காணமால் போனதாக நம்பி கடந்த இரண்டு வாரங்களாக தேடி வந்தனர்.
குழந்தையை கொன்றுவிட்டு பின் உடலை அப்புறப்படுத்திவிட்டு , போலீசில் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர் அந்தக் குழந்தையின் தந்தை.
குழந்தைக்கு தண்டனை
வெஸ்லி மேத்யூ என்ற நபர் ஒரு வருடத்திற்கு முன்பு ஷெரின் என்ற பெண் குழந்தையை இந்தியாவில் இருந்து தத்து எடுத்தார். இந்த குழந்தையை தன் மனைவியுடன் சேர்ந்து பராமரித்து வந்த இவர் சில வாரங்களுக்கு முன்பு இந்தக் குழந்தை காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் அளித்தார். இந்த குழந்தை சரியாக பால் குடிக்காததால் அதிகாலை மூன்று மணிக்கு வெளியே நிற்க வைத்ததாகவும், அதன் பின் அந்தக் குழந்தை காணாமல் போய்விட்டதாகவும் இவர் போலீஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்து இருந்தார்.
பல நாள் தேடுதல்
இதையடுத்து இந்த விவகாரம் பெரிதானது. குழந்தையை சரியாக நடந்த்தவில்லை என்று வெஸ்லி கைது செய்யப்பட்டார். காணமல் போன குழந்தையை தேடும் பணியில் டெக்சாஸ் போலீசார் தீவிரமாக இறங்கினர். அனைத்து ஊடகங்களிலும், அமெரிக்காவின் அனைத்து தெருக்களிலும் காணாமல் போன ஷெரின் பற்றியே பேச்சாக இருந்தது. அதே நேரத்தில் இந்தக் குழந்தை இறந்தும் போய் இருக்கலாம் என்று போலீசாரால் சந்தேகிக்கப்பட்டது.
நாடகம் ஆடிய வெஸ்லி
இந்த நிலையில் தொடக்கத்தில் வெஸ்லி போலீசுடன் சேர்ந்து குழந்தையை தேடுவதற்கு உதவியுள்ளார். பின் குழந்தையை கண்டுபிடிப்பதில் அவரது ஆர்வம் குறையவே போலீசார் சந்தேகித்து அவரை விசாரித்து உள்ளனர். மேலும் குழந்தை காணாமல் போன அன்று அதிகாலை நான்கு மணி அளவில் யாரோ அங்கிருந்து காரில் சென்றதாகவும் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வாக்கு மூலம் அளித்து இருக்கின்றனர். இதையடுத்து போலீசாரிடம் கதையை மாற்றி மாற்றி கூறியிருக்கிறார் வெஸ்லி.
உடலை மறைத்த வெஸ்லி
விசாரணை அதிகம் ஆகவே கடைசியாக வெஸ்லி நடந்த உண்மைகளை ஒப்பாக கொண்டார். அதன்படி குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அது தொண்டையில் அடைத்தே அந்தக் குழந்தை இறந்ததாக கூறியிருக்கிறார். அவளுக்கு மூச்சு வாங்க முடியாமல் இருந்தும் நிறைய பால் கொடுத்ததாக கூறியுள்ளார். குழந்தை மூச்சு வாங்க முடியாமல் இருந்ததை பார்த்து எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் குழந்தை இறந்த பின் உடலை காரில் எடுத்துச் சென்று மறைத்து வைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். அந்தக் குழந்தை சரியாக செயலாற்ற முடியாத "சிறப்புக் குழந்தை'' என்பது குறிப்பிடத்தக்கது.
தூங்கி கொண்டிருந்த அம்மா
இந்த விஷயம் அத்தனையும் நடந்த போது வெஸ்லியின் மனைவி சினி வெஸ்லி தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தக் குழந்தையின் உடலை போலீசார் டெக்சாஸின் ஒரு பாலத்திற்கு கீழ் இருந்து எடுத்தனர். தற்போது இந்தக் குழந்தையின் பிரேத பரிசோதனை நடந்து வருகின்றது. மேலும் வெஸ்லி கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.