பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாத விரக்தி.. பதவி விலகல் முடிவை எடுத்த தெரசா மே
லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற அனுமதி கோரிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதனையடுத்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973 முதல் பிரிட்டன் உள்ளது. இந்த கூட்டமைப்பில் இணைந்ததால் பிரிட்டன் தனது தனித்துவத்தையும், இறையாண்மையையும் இழந்துவிட்டதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெரும்பாலான மக்கள் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த வாக்கெடுப்பு முடிவை அடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது என பிரெக்ஸிட் ஒப்பந்தம் போட்டப்பட்டது.
ஆனால் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்கவில்லை. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற தெரசா மே இதுவரை 3 முறை முயற்சி செய்துவிட்டார். ஆனால் மூன்று முறையுமே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தற்போது நான்காவது முறையாக பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அவர் தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான வாக்கெடுப்பு வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் தெரசா மேவின் தொடர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல முக்கிய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பிரதமர் மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து தெரசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் தெரசா மே அதிர்ச்சியடைந்தார் அவரது அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தெரசா மே. அப்போது கண்ணீர் மல்க பேசிய அவர் பிரிட்டன் மக்களவையில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலவில்லை.
இதனால் நான் கனசர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியை வரும் ஜூன் 7-ல் ராஜினாமா செய்கிறேன் என உணர்ச்சிப்பூர்வமாக அறிவித்தார். மேலும் பிரிட்டன் பிரதமராக 2 முறை பணியாற்றியதை என் வாழ்நாள் கவுரவமாக கருதுகிறேன். கவலையின்றி நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன் என்றார்
மேலும் பேசிய அவர் கனசர்வேட்டிவ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை மட்டுமே தாம் பிரதமராக நீடிப்பேன் என்றார்
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications