குழந்தையை கடத்தி, சீரழித்து, நரமாமிசம் சாப்பிட திட்டம்: இங்கிலாந்து மனிதருக்கு 27 ஆண்டுசிறை
வாஷிங்டன்: குழந்தைகளைக் கடத்திக் கொண்டு வந்து கொன்று, நரமாமிசம் சாப்பிட திட்டமிட்ட குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை விதித்து அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 40 வயது ஜாப்ரே போர்ட்வே, அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் பகுதியில் வசித்து வந்தான். ஜாப்ரே தனது வீட்டில் வெளியே சத்தம் கேட்காதவாறு ஒரு ரகசிய அறையைக் கட்டி இருந்தான். மேலும், அந்த அறைக்கு குழந்தைகளைக் கடத்திக் கொண்டு வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நரமாமிசம் சாப்பிட ஜாப்ரே திட்டமிட்டிருந்தது அம்பலமானது.
அவனது அறையைச் சோதனையிட்ட போது குழந்தைகளைச் சித்ரவதை செய்ய பல விநோத கருவிகளை அவன் வாக்கி இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். போலீசிடம் சிக்கிக் கொண்ட ஜாப்ரே, விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
அதனைத் தொடர்ந்து அவனுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications