கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கியது லிபரல் கட்சி... ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது
சிட்னி: கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி முன்னிலை பெற்றுள்ள லிபரல் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
ஆஸ்திரேலியாவில் 151 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியே வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

ஆனால் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி 70 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. தொழிலாளர் கட்சி 63 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் ஸ்காட் மோரிசன் தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது பிரதமருக்கான போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். இந்தநிலையில், ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் ஸ்காட் மோரிசன் தேர்வாகிறார்.
ஒருவேளை, தற்போதைய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றிருந்தால், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் தொழிலாளர் இயக்கத் தலைவருமான பில் ஷார்டன் (Bill Shorten) ஆஸ்திரேலியப் பிரதமராக வந்திருப்பார் என சொல்லப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications