அபிநந்தன் விடுதலை என இம்ரான் கான் அறிவித்ததும்.. நாடாளுமன்றத்தில் நடந்தது இதுதான்- வீடியோ
Recommended Video

சென்னை: அமைதி நடவடிக்கையாக, இந்திய பைலட் அபிநந்தன், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இந்த அறிவிப்பை, இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானியர்களும் வரவேற்றதை, சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது.

அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திற்குள் எந்த ஒரு எதிர்ப்பையும் எம்பிக்கள் தெரிவிக்கவில்லை. மாறாக, இம்ரான்கானின் இந்த அறிவிப்புக்கு, ஒட்டுமொத்தமாக மேஜையை தட்டி தங்கள் வரவேற்ப்பை தெரிவித்தனர்.
The moment Pakistan Prime Minister Imran Khan told Parliament that a peace gesture to India its pilot Wing Commander Abhinandan will be released tomorrow
— omar r quraishi (@omar_quraishi) February 28, 2019
Also note that all MPs thumped their desks in approval pic.twitter.com/DS4K8NcRd3
இதன் மூலம் இந்தியாவுடனான மோதலை பாகிஸ்தான் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பிரதமர் இம்ரான் கான், மட்டுமல்ல ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாடாளுமன்றமுமே, இந்தியாவுக்கு எதிரான மோதலை விரும்பவில்லை என்பதைத்தான், எம்பிக்களின் இந்த வரவேற்பை பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.
[Read more: அமைதிதான் முக்கியம்.. மாற்றத்தை ஏற்படுத்திய இம்ரான் கான் பேச்சு.. நாடாளுமன்றத்தில் சிறப்பான உரை!]












Click it and Unblock the Notifications