வெளிநாடுகளில் மருத்துவம் படித்து..இந்தியாவில் பணியாற்ற தகுதி தேர்வு எழுதுவோர் 3 மடங்கு அதிகரிப்பு!
மாஸ்கோ: வெளிநாடுகளில் மருத்துவம் படித்து இந்தியாவில் டாக்டராக பணியாற்ற தேவையான தகுதி தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து வருகிறது. இங்குள்ள இந்திய மாணவர்களை ‛ஆபரேஷன் கங்கா' எனும் பெயரில் மத்திய அரசு விமானங்களில் மீட்டு வருகிறது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் அங்கு மருத்துவம் படிக்கின்றனர்.
இந்தியாவை ஒப்பிடும்போது உக்ரைனில் மருத்துவ படிப்புக்கான செலவு குறைவு. நீட் தேர்வும் கிடையாது. இந்தியாவில் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பை படித்து முடிக்க ரூ.60 லட்சம் முதல் ரூ.1.1 கோடி வரை செலவாகிறது. உக்ரைனில் மருத்துவ படிப்பு பயில வெறும் ரூ.15 முதல் ரூ.16 லட்சம் மட்டுமே செலவாகிறது.

தகுதி தேர்வு
உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் டாக்டராக வேண்டும் என்றால் தகுதித்தேர்வு எழுத வேண்டும். Foreign Medical Graduates Examination எனும் தகுதித்தேர்வில் அவர்கள் தேர்ச்சி அடைவது கட்டாயமாக உள்ளது. இந்த தேர்வு ஆண்டுக்கு 2 முறை தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஒருவர் 3 முறை எழுத வேண்டும். இதில் கட்டாயம் தேர்ச்சி அடைவது அவசியமாகும்.

3 மடங்கு உயர்வு
இந்நிலையில் தான் foreign medical graduates examination எனும் தகுதி தேர்வு எழுதும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டில் 3 மடங்கு உயர்ந்து உள்ளது. தேசிய தேர்வு வாரியத்தின் கணக்குப்படி 2015ல் 12,116 பேர், 2016ல் 12,342 பேர், 2017 ல் 15,949 பேர், 2018 ல் 21,351 பேர், 2019 ல் 28,532 பேர், 2020ல் 35,774 பேர் இந்த தகுதி தேர்வு எழுதியுள்ளனர். இந்தியாவில் 2020ல் 30 ஆயிரம் மருத்துவ இடங்கள் அதிகரித்த போதிலும் 35,774 பேர் தகுதி தேர்வில் பங்கேற்று இருந்தனர்.

எங்கு படித்தவர்கள் அதிகம்
இந்தியாவில் இந்த தேர்வு எழுதும் பெரும்பாலானவர்கள் சீனா, ரஷ்யா, உக்ரைன், கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், கசகஸ்தான் நாடுகளில் மருத்துவம் படித்தவர்களாக உள்ளனர். 2020ல் நடந்த தகுதிதேர்வை பொறுத்தமட்டில் சீனாவில் படித்த 12,680 பேர், ரஷ்யாவில் பயின்ற 4,313 பேர், உக்ரைனில் படிப்பை முடித்த 4,258 பேர், கிர்கிஸ்தானில் பயின்ற 4,156 பேர், பிலிப்பைன்ஸில் படித்த 3,142 பேர், கசகஸ்தானில் பயின்ற 2,311 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

தேர்ச்சி விகிதம் எவ்வளவு
கடந்த 5 ஆண்டு நடந்த தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் சராசரியாக 15.82 சதவீதமாக உள்ளது. உக்ரைனில் படித்தவர்களின் தேர்ச்சி விகிதம் 17.22 சதவீதமாக உள்ளது. மேலும் பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015யை ஒப்பிடும்போது 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதுபற்றி தேசிய தேர்வு வாரியத்தில் பணியாற்றிய மூத்த டாக்டர் ஒருவர் கூறும்போது, ‛‛பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கும் நபர்கள் இந்திய தகுதி தேர்வில் அதிகம் தேர்ச்சி அடைகிறார்கள். பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்தவர்களின் தேர்ச்சி விகிதம் 2020ல் 33.7 சதவீதமாகவும், 2019ல் 50.2 சதவீதமாகவும் இருந்தது'' என்றார்.

பிரச்சனைக்கு தீர்வு என்ன
இதுபற்றி தேசிய மருத்துவ கமிஷனின் இளங்கலை மருத்துவக் கல்வி வாரிய தலைவர் அருணா வணிகர் கூறுகையில், ‛‛ரஷ்யா, சீனா, உக்ரைன் போன்ற நாடுகளில் படிக்கும் மாணவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இவர்களில் 20 சதவீதத்துக்கும் குறைவானர்கள் மட்டுமே இந்தியாவுக்கான தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். 2020 தேர்வில் சீனாவில் படித்த 13 சதவீதம் பேரும், உக்ரைனில் படித்தவர்களில் 16 சதவீதம் பேரும் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகள் கட்டண நிர்ணயம் செய்து வேண்டியது அவசியமாகும். இதன்மூலம் மனிதாபிமானத்துடன் தகுதியுடையவர்கள் படிக்க முடியும்'' என்றார்.

83 ஆயிரத்துக்கு 16 லட்சம்
மேலும் பிற நாட்டினரை விட இந்தியர்கள் தான் வெளிநாடுகளில் அதிகமாக மருத்துவம் படிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் சுஜாதா ராவ் கூறுகையில், ‛‛மக்கள் தொகை பெருக்கம், நோய்கள் அதிகரிப்பு ஆகியவை மருத்துவர்களுக்கான தேவையை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முன்கூட்டிய திட்டமிடல் மூலம் மருத்துவ கொள்கைகள் விரிவடையவில்லை. இது எதிர்வினையாற்றுகிறது''என்றார். 2021ல் இளநிலை மருத்துவ படிப்புக்கான 83 ஆயிரம் இடங்களுக்கு இந்தியாவில் 16 லட்சத்துக்கும் அதிக மாணவர்கள் நீட் தேர்வில் போட்டியிட்டனர். இதில் ஒரு பங்கு இடங்கள் மட்டுமே அரசு கல்லூரிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர்கள் தேவை என்ன
உலக சுகாதார நிறுவன கணக்குப்படி 1000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் இந்தியாவில் 1.38 மில்லியன்(13 லட்சத்து 80 ஆயிரம்) டாக்டர்கள் தேவை உள்ளது. ஆனால் தேசிய சுகாதாரத்துறை புள்ளவிபரப்படி 1.2 மில்லியன்(12 லட்சம்) டாக்டர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளது தெரியவந்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications